உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு நவ.8க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு நவ.8க்கு ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை நவ.,8க்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது.2006--2011 தி.மு.க., ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 2012ல் வழக்கு பதிவு செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் இருந்து 2022 டிசம்பரில் தங்கம் தென்னரசும், 2023 ஜூலையில் சாத்துார் ராமச்சந்திரனும் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து, இந்த வழக்குகளை மீண்டும் விசாரித்து அமைச்சர்களின் விடுதலை செல்லாது எனவும், மீண்டும் வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் இருந்து விசாரிக்கவும் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அமைச்சர்கள் இருவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு செப்.,6ல் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவின் படி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சர்கள் இருவர் மீதான வழக்குகளும் தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.இதில் நேற்று சாத்துார் ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணை நடந்தது. அதில் அமைச்சர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் மாரியப்பன் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவின் தடை உத்தரவால் இந்த வழக்கானது, இந்த நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி முடிந்து போன ஒரு வழக்காகும். இதனை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என வாதிட்டார். அதனை முதன்மை மாவட்ட நீதி ஜெயக்குமார் ஏற்க மறுத்து வழக்கின் விசாரணையை நவ.,8க்கு ஒத்தி வைத்தார்.லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் சேது, இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆஜராகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி