விழிப்புணர்வு ஊர்வலம்
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு ஊர்வலம் துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமையில் நடந்தது. டி.எஸ்.பி. ராஜா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எஸ்.ஐ. தர்மராஜ், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மாணவர் நல இயக்குனர் பாலகண்ணன் பங்கேற்றனர். மாணவர்கள் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செல்வராணி செய்திருந்தார்.