| ADDED : பிப் 12, 2024 04:29 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி கணினி அறிவியல், பொறியியல் துறை, இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியர்ஸ் மற்றும் கிளஸ்ட்ரா அமைப்பு இணைந்து டேட்டா இன்ஜினியரிங் குறித்த தொழில் வழிகாட்டுதல்எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.சென்னையின் மிஸ்டர் கூப்பர் நிறுவன முதன்மை பொறியாளர் மனோஜ் சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.கல்லுாரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன், நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ்,செல்வராஜ் கணினி பொறியியல் துறை தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.ஏற்பாடுகளை இணை பேராசிரியர்கள் வெங்கடேஷ், சோபியா, தங்கமேரி, விஜயா, அமலா தேவி செய்தனர்.