உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

விருதுநக ; விருதுநகரில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளில் தடையில்லாமல் குடிநீர் வினியோகம் வழங்குவது குறித்து, வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடர்புடைய அரசு அலுவலர்கள், அறிவுரை ஆலோசனைகளை வழங்கினர். கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்மட்ட நீர்தேக்கத்தொட்டிகள், கிணறுகள் உள்ளிட்டவைகளின் எண்ணிக்கை குறித்தும், அவற்றில் தற்போது செயல்பாட்டில் உள்ளவை குறித்தும், பழுதாக உள்ளவைகளின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். பொது நிதியை பயன் படுத்தி ஆழ்துளை கிணறு அமைத்து கூடுதலாக குடிநீர் சீராக வழங்க நட வடிக்கை எடுப்பது குறித்தும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினர். திட்ட இயக்குநர் கேசவதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை