வரிச்சியூர் செல்வம் நவ.12ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர்: கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் உள்ளிட்டோர் நவ. 12ல் ஆஜராக விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரைவரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து பின் அவரிடமிருந்து பிரிந்து வந்தவர் விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 32. இவர் 2021ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கிறது. வரிச்சியூர் செல்வம் உட்பட 7 பேர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில்தொடர்புடைய வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 5 பேரை தவிர தாடி சதிஷ், கிருஷ்ணா ஆகிய இருவர் மட்டும் ஆஜராகினர். இந்நிலையில் நவ. 12ல் ஏழு பேரும் ஆஜராக மாவட்ட கூடுதல் நீதிபதி அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார்.