மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
2 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
2 hour(s) ago
சிவகாசி : சிவகாசியில் இருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள சேதமடைந்த மின் கம்பங்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசியிலிருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டின் ஓரத்தில் மின் கம்பங்கள் உள்ளன. இதன் வழியாக அப்பகுதியினருக்கு உயர் அழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. இங்கு பெரும்பான்மையான மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. போக்குவரத்து நிறைந்த ரோட்டின் ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. மக்கள் நடமாடும் போது மின்கம்பம் சேதம் அடைந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago