மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கிஎலக்ட்ரீஷியன் பலி
04-Apr-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 45, இவர் எலக்ட்ரீசியன்.இவருடைய மனைவி ஜெயசித்ரா, 42, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நர்சாக உள்ளார். நேற்று முன்தினம் சீனிவாசன் பந்தல்குடி -உடையநாதபுரம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணி செய்து கொண்டிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Apr-2025