உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீரசோழனில் இரும்பு கடையில் தீ

வீரசோழனில் இரும்பு கடையில் தீ

நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் அரியமலை என்பவருக்கு சொந்தமான இரும்பு குடோன் உள்ளது. அங்கு பழைய இரும்பு, பேப்பர், பாட்டில்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் அங்கு தீப்பிடித்து மள மளவென எரிந்தது. திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ