உரிமம் இன்றி துப்பாக்கி : போலீஸ்காரருக்கு கம்பி
விருதுநகர்: விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்காரர், உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்தாக கைது செய்யப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர், திருட்டு டூ வீலரில் தப்பிச் சென்றதாக விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. விருதுநகர், பட்டம்புதுார் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த அவர்களை, ஆர்.ஆர்.நகரில் வச்சக்காரப்பட்டி போலீசார் பிடித்தனர்.அதில், ஒருவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரியும் கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி, 33, என்பதும், உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததும், அதில் ஐந்து தோட்டாக்கள் இருப்பதும் தெரியவந்தது.வத்திராயிருப்பு ஸ்டேஷனில் மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிந்தது. தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரிடம் விசாரிக்கின்றனர்.