இலவச சோலார் மின்விளக்கு நிறுவனத்திற்கு பாராட்டு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி வார்டுகளுக்கு இலவசமாக சோலார் வழங்கிய நிறுவனத்திற்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார். அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் மின் விளக்கு வசதி இல்லாத பகுதிகளுக்கு சோலார் மின் விளக்கு அமைக்க, கேன் பின் ஹோம்ஸ் நிறுவனம் தங்களுடைய நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. அந்நிறுவனத்திற்கு அருப்புக்கோட்டை நகராட்சி தலைவி சுந்தரலட்சுமி, துணைத் தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.