பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
விருதுநகர்: வி.சுந்தரலிங்கபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு சுதர்ஷண ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு துவங்கியது. மேலும் வரதராஜ பெருமாள், பூமா தேவி நீளாதேவிக்கு கும்பாபிஷேக விழா மங்கள வாத்தியங்கள் முழங்க நேற்று காலை 8:30 மணிக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.