மகரிஷி பள்ளி ஆண்டு விழா
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் மழலையர் துவக்க பள்ளியில் 31 வது ஆண்டு விழா நடந்தது.தாளாளர் குருவலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சித்ரா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். முதல்வர் சிவப்பிரியா வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மாணவர்களின் கதை தொகுப்பினை வெளியிட்டு விவேகா பள்ளி தாளாளர் பெரிய மகாலிங்கம் பேசினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.