வருவாய் கிராம ஊழியர்கள் மறியல்: 34 பேர் கைது
விருதுநகர்: அலுவலக உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700ஐ வழங்குவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் விருதுநகரில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னத்துரை, நிர்வாகிகள் ரத்தினக்குமார், சுப்பிரமணியன், வெங்கடேசன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கணேசன், பாலசுப்பிரமணியன் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் பேசினர். 34 பேர் கைது செய்யப்பட்டனர்.