துாய்மை பணியாளர் தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் வி.எம்.சி., காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து 30. இவர் நகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளராக பணிபுரிகிறார்.இவரின் மனைவி குடும்பச்சண்டை காரணமாக பெற்றோர் வீட்டிற்கு பிரிந்து சென்றார். இதனால் மனவருத்தமடைந்தவர் நேற்று காலை 9:00 மணிக்கு மாவட்ட மைய நுாலகம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.