கல்லுாரியில் கருத்தரங்கு
ராஜபாளையம் : எ.கா.த தர்மராஜா பெண்கள் கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சார்பாக கருத்தரங்கு நடந்தது. சிறப்பு விருந்தினராக ராஜுக்கள் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர் ஞான வேலாயுதம் பங்கேற்று செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்கள் நிர்வாகக்கப்படுவது குறித்தும் அதன் சாதக பாதகங்கள் பற்றி விளக்கினார். முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் ஜமுனா வாழ்த்தி பேசினார். உதவிப் பேராசிரியர் ரேவதி அறிமுக உரையாற்றினார். மாணவி சுரேகா நன்றி கூறினார்.