பிளாஸ்டிக் பைகள் பதுக்கிய கடைக்கு சீல்
சிவகாசி:சிவகாசி மாநகராட்சி சிவன் மாட வீதியில் உள்ள கடைகளில் கமிஷ்னர் சரவணன், சுகாதார அலுவலர்கள் சுரேஷ், திருப்பதி, சத்தியராஜ் சுகாதார ஆய்வாளர் சித்திக் தலைமையில் துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அப்பகுதி கடையில் 300 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது தொடர்ந்து அந்த கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை சீல் வைக்கப் பட்டது.