உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளிச் சுற்றுச்சுவர் சேதம் மாணவர்கள் அச்சம்

பள்ளிச் சுற்றுச்சுவர் சேதம் மாணவர்கள் அச்சம்

சிவகாசி : சிவகாசி அருகே வடமலாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் சேத மடைந்துள்ள சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும். வடமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆனைக்குட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளி யின் ஒரு பகுதியில் சுற்றுச் சுவர் சேதமடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் சேதம் அடைந்து விழும் நிலையிலும் உள்ளது. மாணவர்கள் நடமாடும் போது சுவர் இடிந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சுற்றுச்சுவர் சேத மடைந்த பகுதியில் வெட்டப்பட்ட சீமை கருவேல மரங்களை வேலியாக அமைத்துள்ளனர். இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் நடமாடி மாணவர்களை அச்சப் படுத்துகிறது. தவிர பள்ளியில் ஆய்வகத்தில் விலை உயர்ந்த பொருட்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவற்றிற்கு பாதுகாப்பு இல்லை. எனவே இப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்து வாட்ச்மேன் நியமிக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ