திருக்குறள் வினாடி வினா போட்டி துவக்கம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாவின் முதல் நிலைப் போட்டி கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இதில் 209 அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் 9 தமிழ் ஆசிரியர்கள் முதல் நிலைப் போட்டியில் வெற்றி பெற்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 38 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இறுதி போட்டி டிச. 28ல் விருதுநகரில் நடக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.