உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் மலையேற்ற கட்டணம் குறைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் மலையேற்ற கட்டணம் குறைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் மலையேற்ற கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.அவரது செய்தி குறிப்பு:ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை 9 கிலோமீட்டர் தூரமுள்ள மலையேற்ற திட்டம் வனத் தீ தடுப்பு நடவடிக்கை, மலை ஏறுபவர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக கடந்த 2 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.தற்சமயம் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.இதற்காக இதுவரை ஒரு நபருக்கு ரூ. 2500 கட்டணம் பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 1260 ஆகவும், 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு ரூ.818 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு மற்றும் பழச்சாறு ஆகியவை அடங்கும்.எனவே, இதற்கான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றம் செல்ல பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை