உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுல் விலை உயர்வு: பேண்டேஜ் துணி உற்பத்தி பாதிப்பு

நுல் விலை உயர்வு: பேண்டேஜ் துணி உற்பத்தி பாதிப்பு

விருதுநகர்:நூல் விலை உயர்வு காரணமாக சத்திரப்பட்டியில் பேண்டேஜ் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியில் உற்பத்தியாகும் பேண்டேஜ் துணி உற்பத்தி இந்தியா மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் 75 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேண்டேஜ் உற்பத்திக்கு முக்கிய தேவையான 40 ம் நம்பர் நூல் 50 கிலோ கொண்ட மூடை ஒன்றுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை சிறிது, சிறிதாக கூடி உச்ச கட்டமாக ரூ. 11 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் மத்திய அரசு வெளி நாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதன் காரணமாக நூல் விலை கட்டுப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன் 7 ஆயிரம் ரூபாயாக குறைந்திருந்தது. கடந்த பத்து நாட்களாக மீண்டும் நூல் விலை அதிகரித்து ரூ.8 ஆயிரத்து 200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நூல் விலை நிலையில்லாமல் குறைவதும், கூடுவதுமாக இருப்பதால், முன் கூட்டியே ஆர்டர் எடுத்த உற்பத்தியாளர்கள் விலை நிர்ணயம் செய்திருப்பார்கள். தற்போது நூல் விலையை காரணம் காட்டி பேண்டேஜ் துணியின் விற்பனை விலையை அதிகரிக்க முடியாத நிலை இருப்பதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேண்டேஜ் துணி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுப்படுத்தி நிலையான விலையில் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஆக 20, 2025 06:57

இப்பொழுதெல்லாம் ரீல்ஸ் மோகத்தில் மிகவும் ஆபத்தான இடங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது ஆபத்தானது என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. வெளியூர் ஆற்றில் எந்த இடத்தில் பாறை இருக்கிறது? எந்த இடத்தில் குழி இருக்கிறது? நீரோட்டம் எப்படி இருக்கிறது? என்று தெரியாத பொழுது இவர்கள் பாதுகாப்பில்லாமல் ஆற்றில் இறங்குவதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எத்தனை பேர் இதுபோல் இறந்தாலும் இவன்களுக்கு புத்தி வருவதே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுப்பதே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி