உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,22, இவர் கடப்பா கல் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் வேலைக்குச் சென்றவர் கடப்பா கல் அறுக்கும்போது மெஷின் வயரில் கால் பட்டு மின்சாரம் பாய்ந்து மயங்கினார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து, அங்கிருந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ