உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

சென்னை : தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,655 ரூபாய்க்கும்; சவரன், 53,240 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 96 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. இதனால், அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 6,720 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 53,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 1.50 ரூபாய் உயர்ந்து, 97.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை