உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை: இ.பி.எஸ்., மீண்டும் சாடல்

துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை: இ.பி.எஸ்., மீண்டும் சாடல்

சென்னை: துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை தான். அவர் பச்சோந்தி போல் அவ்வப்போது நிறம் மாறுபவர் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.மதுரை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலே ஜனநாயக படுகொலை தான் நடைபெறும். விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு மூன்று நேர உணவும், பணமும் கொடுக்கிறார்கள். திமுக ஆட்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆடுகளை வெட்டுவது போல் கொலை

தி.மு.க., பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கசாப்பு கடைக்காரர்கள் ஆடுகளை வெட்டுவது போல, மனிதர்களை ரவுடிகள் வெட்டுகிறார்கள். தி.மு.க., முதல்வரின் சொந்த தொகுதியிலேயே பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விசுவாசம் இல்லாத பன்னீர் செல்வம்

பன்னீர்செல்வம் எப்போதும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்தது கிடையாது. அவர் ஒரு சுயநலவாதி. அவர் ராமநாதபுரம் தொகுதியில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டார். லோக்சபா தேர்தலில் பன்னீர் செல்வம் பெற்ற ஓட்டுகளுக்கு பணம் தான் காரணம். இரட்டை இலை சின்னத்தை முடக்க பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.

துரோகி

இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார். தொண்டர்களை எப்படி அரவணைப்பார். பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.,வில் இணைக்க ஒரு சதவீதம் கூட இடமில்லை. இது பொதுக்குழு உறுப்பினரால் எடுக்கப்பட்ட முடிவு. துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை தான். கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமில்லாதவர் அண்ணாமலை. பச்சோந்தி போல் அவ்வப்போது நிறம் மாறுபவர் அண்ணாமலை. அண்ணாமலை போன்று நான் நியமன தலைவர் அல்ல.

50 ஆண்டுக்கால உழைப்பு

கட்சி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். 50 ஆண்டுக்காலம் கட்சிக்காக உழைத்த பிறகு தான் இந்த பதவிக்கு வந்துள்ளோம். முதலில் கட்சி தலைவர் போல் பேச அண்ணாமலை கற்றுக்கொள்ள வேண்டும். அவர் கண்ணாடியில் பார்த்து அவரது நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து நேர்மையாக விசாரிக்க சி.பி.ஐ., விசாரணை தேவைப்படுகிறது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

skv srinivasankrishnaveni
ஜூலை 10, 2024 11:38

அப்படீங்களா அப்ப நீங்க என்ன தூய்மையான உத்தமர் காந்திகளா திராவிடம் என்று இவனெல்லாம் தன்னை சொல்லிக்கும்போது அசிங்கமாயிருக்கு அதிமுக திமுக அண்ட் அவங்க கூட்டாளிகள் எல்லாமே பிராடுகளேதான் ஒத்தனையொத்தன் நம்பாமல் எப்போதும் தன்னையே மட்டும் நம்பும் கயவர்களேதான் முகாலெந்து கடைசீ தொண்டர்கள் வரை


venugopal s
ஜூலை 08, 2024 12:17

இப்போதாவது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? இனிமேலாவது கூட்டணி, கூட்டு, பொரியல் என்று பாஜக பக்கமே நெருங்காமல் இருங்கள்!


ramani
ஜூலை 08, 2024 11:11

துரோகத்தை பற்றி பேச உனக்கு அருகதையில்லை இடைப்பாடி. நீ எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தது மறந்து விட்டாயா. அவர்கள் திமுகவை எதிரியாக தான் பார்த்தார்கள். ஆனால் நீ திமுகவுடன் மறைமுக கூட்டணி அமைத்து இருக்கிறாய். அதிமுக தொண்டர்களை அதிமுக அபிமானிகளை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் செய்தவர் ஜெயகுமார் கேபி முனுசாமி விஞ்ஞானி ராஜூ இவர்களுடன் சேர்ந்து துரோகம் செய்வது மறந்து விட்டீர்களா


rau
ஜூலை 08, 2024 11:00

EPS during your rule ,BJP protected your leaders and the party from the onslaught of opposition and safe guarded your govt return turned traitor against BJP now and your selfish attitude has now joined hands with DMK which is against the policy of the founder leader MGR and JJ who were constantly opposing DMK in every forum.


M.S.Jayagopal
ஜூலை 08, 2024 08:24

கட்சியினரை கொத்தடிமைகளாக நடத்திய சசிகலாவை ,மனதில் வைத்து, தக்க நேரத்தில் அவரை எடப்பாடி பழி வாங்கி உள்ளார்.இது மனித இலாய்பு,தவறு சிறிதும் இல்லை. அதேபோல், ஜெயலலிதாவிடம் அடக்கமாக இருந்த ஓபிஸ் எடப்பாடிக்கு பிரச்சினைகளை எப்பொழுதும் கொடுத்துக்கொண்டுதான் இருந்தார். அதனாலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்படியார் குழு மறுக்கிறது.


பேசும் தமிழன்
ஜூலை 08, 2024 07:25

பங்காளி கட்சி திமுக ஆட்சியில் நடக்கும்... அத்துமீறல்கள் இப்போது தான் இவருக்கு தெரிகிறதா ??? இத்தனை நாட்கள் தூக்கத்தில் இருந்தாரா.... எதிர்கட்சி வேலையை அண்ணாமலை அவர்கள் தானே செய்தார்.... இனியும் அந்த வேலையை அண்ணாமலை அவர்களே பார்த்துக் கொள்வார்.... நீங்கள் எப்போதும் போல பங்காளி கட்சிக்கு அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.


பேசும் தமிழன்
ஜூலை 08, 2024 05:01

யாரு.... பத்து தோல்வி பழனிச்சாமியா ??? .... அவர்(பன்னீர்செல்வம்) விசுவாசமாக இருந்த காரணத்தால் தான் ஜெயலலிதா அவர்கள்..... இரண்டு முறை முதல்வர் பதவியை அவருக்கு கொடுத்தார்.... அப்போ ஜெயலலிதா முடிவு தவறு என்று கூறுகிறீர்களா ??? அவரின் முடிவு சரியானது... அதனால் தான் அவரும் அதற்கேற்ப நன்றியுடன் நடந்து கொண்டார்..... ஆனால் நீங்கள் ???


Senthil K
ஜூலை 07, 2024 22:45

எடப்பாடி பழனிச்சாமிக்கு... தகுதியே கிடையாது... தவழ்ந்து கொண்டு.. வத்து.. சசிகலாவால் . முதலமைச்சர் பதவியை வாங்கினார்... அப்புறம் இவரின்.. துரோகம் ஏராளம்...


அக்குட்டி
ஜூலை 07, 2024 22:37

யார் மேஜைக்கு அடியில் தவழ்ந்து போய் காலை பிடித்து, பின் அவரே காலை வாரி விட்டு முதுகில் குத்தியது என்பது அதிமுகவினர் அனைவருக்குமே தெரியும். அது சாணக்கியம் என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் அதற்க்கு பெயர்தான் பச்சோந்தி தனம் என்று பெயர்.


Bala
ஜூலை 07, 2024 22:25

5 கொலைகளைச் செய்துவிட்டு தமிழர்களின் அன்புமிக்க, தமிழருக்காக வாழந்த எம் ஜி ஆர் அவர்களின் கட் சிக்குத் தலைவனாக இருக்கத் தகுதியற்றவனை சிறையில் போட்டால் பிரச்சனை முடிந்துவிடும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை