உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலாவதி பால் பொருட்கள் ஆவின் பாலகங்களுக்கு கட்டாய சப்ளை

காலாவதி பால் பொருட்கள் ஆவின் பாலகங்களுக்கு கட்டாய சப்ளை

சென்னை : காலாவதியாகும் நிலையில் உள்ள பால் பொருட்கள், ஆவின் பாலகங்களுக்கு கட்டாயமாக சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.ஆவின் வாயிலாக பால் மட்டுமின்றி, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், வெண்ணெய், நெய், பால் பவுடர் உள்ளிட்டவற்றிற்கு வரவேற்பு உள்ளது. ஆனால், வெண்ணெய், பால் பவுடர் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. நெய் மட்டுமே அவ்வப்போது விற்பனைக்கு வருகிறது.தயிர், லஸ்சி, மோர், பால்கோவா, மைசூர்பாகு, மிக்சர், பட்டர் முருக்கு உள்ளிட்டவை தயாரிப்பில், ஆவின் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. கோடையில் இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.கோடை மழை காரணமாக, குளிர்ந்த சூழல் நிலவுவதால், பல மாவட்டங்களில் குளிர்ச்சியான ஆவின் பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது. அவை, தேக்கம் அடைவதால், ஆவினுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆவின் உற்பத்தி பிரிவு மற்றும் விற்பனை பிரிவிற்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், விற்பனை குறைந்த பொருட்களை அதிகம் தயாரித்து ஸ்டாக் வைக்கப்பட்டு வருகிறது.இவை, காலாவதி தேதியை நெருங்கும் போது, வேறு வழியின்றி பாலகங்களுக்கு கட்டாயமாக சப்ளை செய்யப்படுகின்றன. இதனால், பாலகங்களை நடத்துவோர் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

'நிர்பந்தம் செய்கின்றனர்'

பால் ஏஜன்ட்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலகங்கள் கேட்கும் பால் பொருட்களை ஆவின் சப்ளை செய்வதில்லை. குறைவாக விற்பனையாகும் தயிர், நுாடுல்ஸ், முருக்கு, மிக்சர் மற்றும் இனிப்பு சப்ளை செய்யப்படுகிறது. காலாவதி நெருங்கும் நேரத்தில் அவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.இப்பொருட்களை மாதத்திற்கு, 40,000 முதல் 50,000 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என, ஆவின் மண்டல மேலாளர்கள் நிர்பந்தம் செய்கின்றனர். பொருட்களை வாங்காதவர்களுக்கு பால் சப்ளை முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்படுகிறது. முறையான திட்டமிடல் இல்லாததால் ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல, பாலகங்கள் நடத்துபவர்களும் நஷ்டம் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
மே 29, 2024 15:45

பால்பண்ணை கூட நடத்த துப்பில்லாத அரசு இந்தியாவை ஆளத்துடிக்கிறது. அரசு சம்பளம் வாங்கும் அதிகாரிகள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய மந்திரியும் நிச்சயமாக வீண்.


kalyan
மே 29, 2024 12:50

கவலை வேண்டாம் பால் சங்கங்களே விரைவில் அமுல் பால் , மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு உங்கள் குறைகள் தீர்க்கப்படும்


Sivagiri
மே 29, 2024 12:29

ஆவினுக்கும், மிக்ஸர், முறுக்கு, சேவு பக்கோடா இவற்றுக்கும் என்ன சம்பந்தம்? மந்திரி ஏரியாவில், மிக்ஸர் பக்கோடா, முறுக்கு தயாரிப்பாளர்கள் ஜாஸ்தி, அவர்களிடம் விற்காத ஐட்டங்களை, அடி மாட்டு விலைக்கு வாங்கி, ஆவின் மூலமாக விற்று, அதன் மூலம் ஒரு அடி அடிச்சிக்கலாம்னு, பிளான் போட்டிருப்பார்.. ஏற்கனவே பால் பாக்கெட்டுகளில் / வெண்ணை, நெய், பாக்கெட்டுகளில், பாக்கெட்டுக்கு ஐந்து மில்லி / பத்து மில்லி குறைத்து போட்டு ஒரு கொள்ளை... திருட்டு மாடலில், விஞான ரீதியிலும் கொள்ளை, வியாபார ரீதியிலும் கொள்ளை


Lion Drsekar
மே 29, 2024 10:22

அரசாங்கம்தான் இருக்கிறது என்று அப்படியே எதையும் பயன்படுத்த வேண்டாம், சாராயம் , பால்கோவா , இரண்டு ஆளுக்கு முன்பு பால்கோவா பொட்டலம் வாங்கி பிரித்தால் முழுவதும் பச்சை நிறத்தில் கெட்டுப்போய் இருந்தது , அங்கேயே பார்த்ததால் கடைக்காரர் திகைத்து நான் அவர்கள் கொடுப்பதை விற்கிறேன் என்று தயங்கி கூறினார் . சாராயம் எதுவுமே சொல்வதற்கு இல்லை, ஒருபுறம் தரம் மறுபுறம் அதிக விலை, அதைவிட விற்பவர்கள் கூடுதல் விலை . இதுதான் இன்றைய மாடல், வந்தே மாதரம்


duruvasar
மே 29, 2024 10:11

தகிடுதத்திற்க்கு பெயர் போனது திராவிட மாடல் என்றால் அது மிகையாகாது


குமரி குருவி
மே 29, 2024 07:40

மக்கள் நலனை விட மக்களை அவதிப்பட வைத்து ஆனந்தம் அடைவதுதான் திராவிட மாடலோ


அப்புசாமி
மே 29, 2024 07:13

போடுங்க... போடுங்க. கண்டதைப் போட்டாலும் துண்றவன் தமிழனாச்சே...


spr
மே 29, 2024 07:12

"முறையான திட்டமிடல் இல்லாததால் ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல, பாலகங்கள் நடத்துபவர்களும் நஷ்டம் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்." திறமையான அதிகாரிகள் இல்லாமை ஒரு காரணமாக இருந்தாலும், இதிலும் அரசியல் வியாதிகளின் தலையீடு இருக்குமோ எனது தோன்றுகிறது அமுல் மற்றும் நந்தினி பால் விற்பனை அதிகரிக்கும் போது ஆவின் மட்டும் நஷ்டம் அடைவதன் காரணம் என்ன கலைஞர் வீட்டுல பொண்ணெடுத்து பெரியவராக ஆனதாகச் சொல்லப்படும் கவின் கேர் மற்றும் திருமலா போன்ற இதர பால் விற்பனை அதிகமாவதால் ஆவின் இழப்பை சந்திக்க வைக்கப்படுகிறதோ


அஆ
மே 29, 2024 06:50

வெளிநாட்டு சதி. ஆவினை நஷ்டபடுத்தி வெளிநாட்டு சரக்கை உள்ளே கொண்டுவர முயற்சி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை