குறுக்கு எழுத்து புதிர்
இடமிருந்து வலம் 1. இழந்த ஒன்றை எண்ணும் போது ஏற்படக் கூடிய உணர்வு. 4. உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது _________. 5. மண்ணைப் பிளக்க உதவும் தோட்டக் கருவி. 6. தாய்_________ பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது! 7. _________ செய்யப்படுவோம் என்று தெரிந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8. தக்கார் இறுதியில் போக்குவரத்து வாகனம். 9. _________ போன தெய்வம் குறுக்கே வந்தது போல். 11. பசுவின் கொடை. 14. மலர்கள் இயற்கையாக கொத்தாக அமைந்திருக்கும் அமைப்பு. 15. கடவுள், ஆட்சி செய்தவன் இரண்டையும் குறிக்கும் சொல். 16. பாஸ்டர் நகருக்குள் முதலாளி. 18. _________ காலத்தில் உதவுபவனே நண்பன். 19. அரிதானது. மேலிருந்து கீழ் 1. வங்கி செயல்படாத நேரத்திலும் இதைப் பயன்படுத்தி நம் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். 2. பார்த்ததும். 3. பெரும்பாலானவர்கள் சாப்பிடவும் எழுதவும் வலது கையை பயன்படுத்து கின்றனர் என்றாலும் _________ பழக்கமுள்ளவர்களும் உண்டு. 4. வீசம் என்பதைப் போல இரு மடங்கு. 9. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது . 10. ஆண் சிங்கத்தின் அழகுமுடி. 12. பாவம், அவனது முயற்சிகள் அனைத்தும் _________ ஆயின. 13. கர்நா டக மாநிலத்தவரின் முக்கிய மொழி. 15. அக்கால மன்னர்களின் சபையில் _________ கவிஞர் என்று ஒருவர் இருந்தார். 17. நுணல் எனப்படுவது _________ளை. விடைகள் இடமிருந்து வலம் 1.ஏக்கம் 4. அலி 5.கடப்பாரை 6.எட்டடி 7.கைது 8.கார் 9.கும்பிடப் 11.பால் 14.மஞ்சரி 15.ஆண்டவன் 16.பாஸ் 18.கஷ்ட 19.அபூர்வமானது மேலிருந்து கீழ் 1.ஏடிஎம் 2.கண்டதும் 3.இடதுகைப் 4.அரைக்கால் 9.குறிஞ்சிப்பூ 10.பிடரி 12.வீண் 13.கன்னடம் 15.ஆஸ்தான 17,தவ