உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரணை கோருவது பேஷனாகி விட்டது: துரைமுருகன்

சி.பி.ஐ., விசாரணை கோருவது பேஷனாகி விட்டது: துரைமுருகன்

வேலுார்: 'எது நடந்தாலும், சி.பி.ஐ., விசாரணை கேட்பது பேஷனாகி விட்டது' என அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில், மூன்று அணைகளில் தண்ணீர் முழுதும் நிரம்பினால் அவர்கள் திறந்து விட்டுதான் ஆக வேண்டும். எல்லா அணையும் கர்நாடகாவில் நிரம்பப்போகிறது. அதனால், தமிழகத்திற்கு தண்ணீர் வரும். சென்னையை சுற்றி புதிதாக, ஏழு நீர்நிலைகள் உருவாக்கப்பட உள்ளன. இவற்றின் வாயிலாக நீர் சேமிக்கப்படும்.எது நடந்தாலும், சி.பி.ஐ., விசாரணை கேட்கின்றனர். கள்ளச்சாராயம் சாவு, ஆம்ஸ்ட்ராங் கொலை என எல்லாவற்றுக்கும் கேட்கின்றனர். இப்படி கேட்பது இப்போது பேஷனாகி விட்டது. எல்லா நாட்களிலும், எல்லா ஆட்சியிலும் கொலை நடந்து கொண்டு தான் இருக்கிறது. முன்விரோதம் காரணமாகவே அதிக கொலைகள் நடக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தை சட்டம் போட்டு தடுக்கிறோம். ஆனால், திட்டம் போட்டு நடத்துகின்றனர். என்ன செய்வது? இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, 'அ.தி.மு.க.,வில் ஆக., 15ம் தேதிக்குள், பன்னீர்செல்வத்தையும்; சசிகலாவையும் சேர்க்க வேண்டுமென, பா.ஜ., மிரட்டுவதாகக் கூறப்படுகிறதே' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், ''அது வெளிநாட்டு செய்தி; அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Matt P
ஜூலை 13, 2024 22:10

இந்த வயசுலயும் பவுடர் தடவி, தலைக்கு டை அடிச்சு இவரு மகன் பொம்பளைங்களை பார்த்து சொன்ன மாதிரி, நல்லாவே நகைச்சுவையா பேசுறாரு கையில தலைவர் புண்ணியத்தில் வந்த காசு ரொம்பவே புரளுது போல .


va.sri.nrusimaan
ஜூலை 12, 2024 19:59

bcz d local police became as ups under your rule


Barakat Ali
ஜூலை 12, 2024 17:26

சி பி ஐ என்ன வானத்திலிருந்து குதித்த அமைப்பா என்று அம்மையாரைப்போலவே நீங்களும் கேட்டுடுங்க ..... ஆமா ... உங்க பேரு துரைமுருகனா அல்லது டி துரைமுருகனா ????


Chandrasekaran Sriram
ஜூலை 12, 2024 15:33

அதெப்படி ?. ஊழல் செய்வது உங்க பேஷன் ஆனா மாதிரியா ?


Narayanan
ஜூலை 12, 2024 13:13

நாம் எதை செய்தாலும் யாரும் ஒன்றும் கேட்கமுடியாது என்ற தனாவட்டில் இதுவரை இருந்ததினால் இப்போ இது புதிதாக தோன்றுகிறது துரைமுருகன் . எப்போதும் இஷ்டம்போல் வேலைக்கு வந்துகொண்டு இருந்தவர்களை இப்போ சரியான நேரத்திற்கு வரச்சொல்லும்போது கஷ்டம்தான் . அதுபோல இப்போ சிபிஐ விசாரணை வரும்போது கஷ்டமாக இருக்கிறது . இதுவரை அவர்களும் சும்மா வந்தது போய் கொண்டு இருந்தார்கள் . இப்போ அவர்களுக்கும், என்ன வேலை செய்தார்கள் என்று பதிவிட சொல்லும்போது அவர்கள் வேலை செய்யத்தானே வேண்டும் . நீங்களும் உங்கள் நாற்பது எம்பிகளிடம் கேளுங்கள் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்த நேரம் , செய்த பணி பற்றி. கேட்கும் போது சொல்லுங்கள் இவ்வளுவு நேரம் பாராளுமன்றத்திற்குள் இருக்கவேண்டும் .அப்போதுதான் அடுத்த தேர்தலில் சீட்டு என்று சொல்லிப்பாருங்கள் அப்போ தெரியும் உண்மை .


N.Purushothaman
ஜூலை 12, 2024 12:43

இந்த மாதிரி ஆளுங்க இப்படி பேசுவது கலிகாலத்தின் உச்சம் என்பது புலப்படுகிறது ...


Muthu Kumaran
ஜூலை 12, 2024 12:28

அந்த லட்சணத்தில் காவல் துறை மற்றும் சிபிசிஐடி உள்ளது. மீடியாக்கள் ஜால்ரா அடிக்கிது உண்மை வெளிய வராது . சி பி ஐ விசாரணை


rau
ஜூலை 12, 2024 12:00

When U and your party were in opposition U and your leader stalin used to meet governors and give memorandum of CBI enquiry,the same is followed now.


ram
ஜூலை 12, 2024 11:52

அரசு ஊழியருக்கு அறுபது ஓய்வு, அனால் இதுபோல ஆட்களுக்கு எண்பது ஆனாலும் பதவி பண ஆசை


Krishna Gurumoorthy
ஜூலை 12, 2024 11:46

60 பேருடைய இறப்பு மற்றும் ஒரு தேசிய பட்டியல் இனத்தை வரின் படுகொலை போன்ற மனதை உலுக்கிய சம்பவங்கள் கூட திமுக தலைவருக்கு கேலி பொருளாகி விட்டது2026 மக்கள் தூக்கி போட்டு மிதிக்கும் போது தெரியும் இப்போதைய காமெடியின் வலி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை