உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமீருக்கு ரூ.4 கோடி கொடுத்தீர்களா? ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை

அமீருக்கு ரூ.4 கோடி கொடுத்தீர்களா? ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மனைவியிடம், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.ஆஸ்திரேலியா, மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேலாக போதைப்பொருள் கடத்திய வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

வாக்குமூலம்

அவரது கூட்டாளிகள், முகேஷ், 33; முஜிபுர், 34 மற்றும் அசோக்குமார், 34; சதானந்தம், 55, ஆகியோரும், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், காவலில் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.அத்துடன், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, மூன்று நாட்கள் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளி சதானந்தம் ஆகியோரிடம் சிறைக்கு சென்று விசாரித்துள்ளனர். அதை வீடியோவில் பதிவும் செய்துஉள்ளனர். அது மட்டுமின்றி, ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர், புஹாரி ஹோட்டல் அதிபர் இர்பான் உள்ளிட்டோர் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தி, 40 கோடி ரூபாய் வரை சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றினர்.அதன் அடிப்படையிலும், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் பெற்ற வாக்குமூலத்தின்படியும், ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு, 32, என்பவரிடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மதியம் 1:00 மணியில் இருந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கேள்வி

அப்போது, 'உங்கள் கணவர் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வது எப்போது தெரியும். வெளிநாடுகளில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு எவ்வளவு தொகை வந்துள்ளது' என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அது பற்றி தனக்கு தெரியாது என அமீனா பானு தெரிவித்துள்ளார்.'உங்கள் கணவர் தினமும் வீட்டிற்கு வந்து விடுவாரா' என்ற கேள்விக்கு, எப்போதாவது தான் வருவார் என்று கூறியுள்ளார்.'இயக்குனர் அமீருக்கு 3.93 கோடி ரூபாயை உங்கள் கணவர் அனுப்பி உள்ளார். அதற்கான தகவல், 'வாட்ஸாப்'பில் அழிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்ட பின் நடந்துள்ளது. 'இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது' என, கேட்கப்பட்ட மேலும் பல கேள்விகளுக்கு அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தமிழ்வேள்
மே 21, 2024 11:38

சுரேஷ் ஜி முஹம்மது ஏழாம் நூற்றாண்டை சார்ந்தவன் என்பதால், அவனுக்கு முன்பு மனித குலம் பாரத வர்ஷத்தில் இல்லை என்றும் கூட சப்பை கட்டுக்கட்டும் அந்த பாலைவன கும்பல் அறிவுக்கும் அவர்களுக்கும் வெகு தூரம்


Rajathi Rajan
மே 21, 2024 11:21

போதை வழக்கில் கைது ஆன ஐந்து பேரில் மூன்று பேர் ஹிந்து, இரண்டு பேர் முஸ்லீம், ஆனால் இங்கு கருத்து சொல்லும் விஷ ஜந்துக்கள் அனைவரும் முஸ்லீம் மீது மட்டும் வன்மத்தை கக்குகிறார்கள்


vijay
மே 22, 2024 10:15

யாரும் சிறுபான்மையினரை மட்டும் குறை சொல்லி வன்மம் சுமத்தவில்லை ஹிந்துக்கள் தவறு செய்தாலும் குற்றம் சுமத்துவோம் அதுதான் நடுநிலை நாங்கள் சிறுபான்மையினர், அதனால்தான் எங்களை குற்றம் பழி சுமத்துகிறீர்கள் என்றும், தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்ற பொன்மொழிகள் கொடுத்து நாட்டை ஏமாற்றுவது யாரப்பா? ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் போதைப்பொருள் உற்பத்தி பெரிய அளவில் நடக்கிறது, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து கடல் மூலமாக குஜராத் துறைமுகங்களுக்கு கப்பலில் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரோவாய்கள் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது யாராக இருந்தாலும், தவறு செய்து மாட்டிக்கொண்டால் திருடனுக்கு தேள் கொட்டினாப்புல பேசாமல் விசாரணைக்கு ஒத்துழைச்சு ஜெயிலுக்கு போகவேண்டும் பெரும்பான்மை சமூக மக்கள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள், முக்கியஸ்தர்கள் யாரையாச்சும் போட்டுக் கொடுத்து விடுவார்கள் மேற்கண்ட பெரும்பான்மை இல்லாத மற்றவர்கள் மட்டும்தான் வழக்குகளில் மாட்டிக்கொண்டால், நான் இந்த சமூகத்தை சார்ந்தவன் அதனாலதான் பலவாங்குகிறார்கள் என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் துணைக்கு சேர்த்துக் கொள்வார்கள், கூடவே விடியல் ஆட்களும் கம்பு சுத்துவார்கள்


A1Suresh
மே 21, 2024 10:39

அடடா என்ன ஒரு மதிநுட்பம்


A1Suresh
மே 21, 2024 10:00

தமிழகத்தில் ராமர் கோயிலே இல்லையாம் அமீர் அவர்கள் கேட்கிறார் ஏனெனில் அவரும் தமிழகத்தில் தான் பல்லாண்டுகளாக வாழ்கிறாராம் நான் பதில் சொல்கிறேன் தில்லைவிளாகம், வடுவூர், கும்பகோணம், தநுஷ்கோடி, நாமக்கல், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருமலை-திருப்பதி, சிதம்பரம், திருக்கண்ணபுரம், திருஹீந்திரபுரம், ஆழ்வார் திருநகரி, திருமாலிரும்சோலை, மதுரை, திருக்கோவிலூர் இப்படி நூற்றுக்கணக்கான திருக்கோயில்களில் ராமர் சன்னதிகளை பார்த்திருப்பாரா அமீர் சுல்தான் கே பச்சா


ஆரூர் ரங்
மே 21, 2024 10:45

மதுராந்தகம் ராமர் ஆலயம் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் ராமர் குறிப்பிடப்பட்டுள்ளாரே.


GoK
மே 21, 2024 09:50

இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா நம்ப சட்டமெல்லாம் அவங்ககிட்ட செல்லாது சொன்னா வீண் பொல்லாப்புதான் மிஞ்சும் நாட்டுல அவுங்களுக்கு தான் முதல் உரிமைன்னு பப்பு காந்தி சொல்லிட்டாரில்ல


subramanian
மே 21, 2024 09:35

அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து , நாடு கடத்த வேண்டும்


karupanasamy
மே 21, 2024 09:10

ஆமாம் மிகப்பெரியவனா? மிகச்சிறியவனா? இல்லை பொடியனா? இவனுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்


Barakat Ali
மே 21, 2024 09:04

பாரத் மாதா கி ஜெய் நாங்க தமிழ்த்தேச மன்னர் குடும்பத்துடன் பேரம் பேசியிருக்கிறோம் "பெரும்பான்மை கிடைக்காவிட்டால் உள்ளேயே வந்து ஆதரவு கொடுங்கள் ஐந்து கேபினெட் கொடுக்கிறோம்" என்று அதனால மன்னர் குடும்பத்தை விசாரணையில் டச் பண்ணமாட்டோம் அவங்களும் தொட்டுப்பாரு, தடவிப்பாரு ன்னு டயலாக் பேசமாட்டாங்க கவனிச்சிருப்பீங்களே? ஆனா திரையுலகை அச்சுறுத்தி வைப்போம்


subramanian
மே 21, 2024 09:33

உங்கள் பாகிஸ்தானில் / மற்ற முஸ்லீம் தேசங்களில் உண்மை பறக்கிறதா பார்க்கிறதா?


karunamoorthi Karuna
மே 21, 2024 09:02

வெள்ளி கிழமை பொய் பேச மாட்டேன்


VENKATASUBRAMANIAN
மே 21, 2024 08:14

உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினால் எல்லா உண்மைகளும் வெளியே வரும் இதுவே ஏழையாக இருந்தால் அதை செய்திருப்பார்கள் நமது நாட்டில் நீதி ஒவ்வொருவருக்கும் மாறுபடும் அதுவும் ஒரே குற்றத்திற்கு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை