உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு கேபிள், டிவியை முடக்க தி.மு.க., அரசு முயற்சிக்கிறது

அரசு கேபிள், டிவியை முடக்க தி.மு.க., அரசு முயற்சிக்கிறது

சென்னை : ‛தி.மு.க., அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, அரசு கேபிள், 'டிவி'யை முடக்க முயற்சிக்கிறது' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2007ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியால், ஒரு சில குடும்ப காரணங்களுக்காக, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், முறையான திட்டமிடுதல் இல்லாததால், எவ்வித செயல்பாடுமின்றி கிடப்பில் இருந்தது.அடுத்து, 2011ல் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், அந்நிறுவனம் புதுப்பிக்கப்பட்டது. மிகக் குறைந்த கட்டணத்தில், மக்கள் பயன்பெறும் வகையில், 24,000 கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் வழியே, 40 லட்சம் இணைப்புகளுடன் செயல்பட்டது. மத்திய அரசின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம், டிஜிட்டல் லைசென்ஸ் பெறப்பட்டது. மாநிலம் முழுதும், 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வினியோகிக்கப்பட்டன.தற்போதைய தி.மு.க., ஆட்சியில், முறையான பராமரிப்பின்மை, சேவை குறைபாடு, செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு போன்றவை காரணமாக, அ.தி.மு.க., ஆட்சியில், 30 லட்சமாக இருந்த இணைப்புகள், தற்போது, 10 லட்சமாக குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது.இந்நிலையில், மென்பொருள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய, ஏ.எம்.சி., தொகையை முறையாக செலுத்தாததால், அந்நிறுவனத்தால் கடந்த, 15ம் தேதி முதல், தமிழகம் முழுதும் அரசு கேபிள், 'டிவி' ஒளிபரப்பில் தடங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் குறைந்த கட்டணத்தில், ஏழை, நடுத்தர மக்கள், 'டிவி' நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இத்தொழிலை நம்பியுள்ள, 15,000க்கும் மேற்பட்ட கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களும், வாடிக்கையாளர்களும், கேபிள், 'டிவி' தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகி உள்ளது. தி.மு.க., அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, அரசு கேபிள், 'டிவி'யை முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

almanara FM
ஜூன் 19, 2024 09:59

காரைக்குடியில் நன்றாகத்தான் இருந்தது. இருப்பினும் ஆட்சி மாறிய பிறகு அது அட்ச்சயா விஷனாக மாறிவிட்டது.


VENKATASUBRAMANIAN
ஜூன் 19, 2024 07:41

அப்புறம் சுமங்கலி கேபிள் குடும்பம் சம்பாதிக்க முடியும். இதுதான் திராவிட மாடல் அரசு


sankaranarayanan
ஜூன் 19, 2024 05:58

ஆட்சி மாறினால்தான் அரசுகேபிள் வாழ முடியும்


Kasimani Baskaran
ஜூன் 19, 2024 05:54

மென்பொருளை புதுப்பிக்கக்கும் தொழில் நுட்பம் கூட தெரியாத நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டால் அவர்களால் எப்படி சேவை வழங்க முடியும்?


Rpalnivelu
ஜூன் 19, 2024 05:19

அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் சுயநலவாதி எடப்பாடியிடமிருந்து கட்சியை காப்பாற்றும் நேரம் வந்துவிட்டது. விடியலிடம் விலை போனவர்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ