உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை கோடை மழையால் தீர்ந்தது

15 மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை கோடை மழையால் தீர்ந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோடை மழையால், 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு சிக்கல் நீங்கியுள்ளது.தமிழகத்தில் 2023ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால், நீராதாரங்களுக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. அணைகள், ஏரிகளில் இருந்த நீர், பாசனம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இதனால், நடப்பாண்டு ஏப்ரல் முதல், பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை துாக்கியது. காவிரி, பவானி, சிறுவாணி, கொள்ளிடம், தாமிரபரணி உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. மோட்டார்களை விடிய விடிய இயக்கி, நிலத்தடி நீரை உறிஞ்சி, தமிழக குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்ததால் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், கோடை மழையால் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ண கிரி, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு குடிநீர் சிக்கல் நீங்கியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், பிலுகுண்டுலு நீரளவு தளத்தை கடந்து, தமிழக எல்லைக்கு வினாடிக்கு, 2,200 கன அடி நீர் வரத்து உள்ளது. ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களில், காவிரி நீரோட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று பகல் நிலவரப்படி, வினாடிக்கு 500 கன அடி நீர்வரத்து கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
மே 19, 2024 09:04

மீடியா க்கலே தண்ணீர் நன்னீர் தேவை ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும் இதை அரசு அதிகாரிகள் எடுத்துக்கொள்வதே இல்லை ஆனால் நன்னீர் இருப்பு குறைந்துகொண்டே செல்கிறது மிக கடுமையான சட்டம் போட்டு தொழிசாலைகள் ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் பேருந்து ரயில் நிலையங்கள் துறைமுகங்கள் விவசாய தோட்டங்கள் போன்ற குடிக்கும் தேவையில்லாத வேலைகளுக்கு மறுசுழற்சி செய்த தண்ணீர் மட்டும்தான் பயன்செய்தல்வேண்டும் என அரசு கடுமையான வார்த்தைகளினால் சொல்லவேண்டும் இதனால்தான் நன்னீர் நமது பேரக்குழந்தைகளுக்கு கிட்டும்


angbu ganesh
மே 18, 2024 09:55

அரசின் கவனத்திற்கு இந்த பாட்டில் தண்ணிய நீங்க ஏன்/ கோவிச்சிருப்பாங்க


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ