உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது

உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 17) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.55 ஆயிரத்து 360க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து இதுவரை இல்லாத அளவில் 55 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, 6 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை, ரூ.55 ஆயிரத்தை தாண்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளியின் விலை, 1 ரூபாய் உயர்ந்து, 100 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை