உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

சென்னை:சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,500 ரூபாய்க்கும்; சவரன், 52,000 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 45 ரூபாய் உயர்ந்து, 6,545 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து, 52,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு 1.30 ரூபாய் உயர்ந்து, 85.30 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ