உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறிய கட்டடம்?: ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறிய கட்டடம்?: ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு அனுமதியளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, 2007ல் கோத்தகிரி ஊராட்சி தலைவராக இருந்த பொன்தோஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்தநீதிபதி,'எஸ்டேட்டில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை' எனக் கூறி நோட்டீசை ரத்து செய்தது.இதனை எதிர்த்து,பொன்தோஸ் தரப்பில்சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் ஆஜராகி, கோடநாடு எஸ்டேட்டில்சொத்து வரிவிதிப்பது தொடர்பாக ஆய்வு நடத்த மட்டுமே அனுமதி கேட்கப்படுகிறது. அப்போது தான், கூடுதல் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக என்ற களநிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும், என்றார்.இதை ஏற்க மறுத்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன்,இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கோடநாடு எஸ்டேட்டில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அதிகாரிகள்நடுநிலையோடுஆய்வு நடத்தலாம். எஸ்டேட்டில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது' எனத் தெரிவித்து, மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GMM
ஜூன் 08, 2024 06:38

ஊராட்சி மன்ற தலைவர் குடியிருப்புக்கு எந்த நோட்டீஸும் அனுப்ப அதிகாரம் இல்லை. ஆணையர் தான் அதிகாரம் பெற்றவர். தமிழகத்தில் அனைத்தும் சுயாட்சி பெற்று விட்டதா? மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தான் அதிகாரம் உண்டு. சசிகலா கொடநாடு மேலாளர் உரிமையாளர் கிடையாது. அவர் உரிமையாளர் சார்பாக அரசு அலுவலகம், நீதிமன்றத்தில் செயல்பட கூடாது. உரிமையாளர் யார் என்று தெரியவில்லை என்றால் முன்னாள் உரிமையாளர் விருப்பம் கேட்டு, அவர் பாதுகாப்பு பராமரிப்பில் இருக்க வேண்டும். அல்லது வருவாய் துறை தன் பொறுப்பில் எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ