உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை துபாய் விமானம் புறப்படுவதில்தாமதம்: பயணிகள் தவிப்பு

மதுரை துபாய் விமானம் புறப்படுவதில்தாமதம்: பயணிகள் தவிப்பு

மதுரை: மதுரையில் இருந்து துபாய் செல்லும் தனியார் விமானம் புறப்படுவதில்தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.மதுரையில் இருந்து துபாய்க்கு தனியார் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில்பயணம் செய்வதற்காக பயணிகள் 40 பேர் விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால் நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய மோசமானவானிலை காரணம் என கூறி விமானம் பறக்கவில்லை.இதனால் பயணிகள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலா விமான நிலையத்திலேயே காத்திருக்கும் நிலைஏற்பட்டுள்ளது. மேலும் காத்திருக்கும் பயணிகளுக்கு விமான நிறுவனம் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே விமான நிறுவனம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும் எனதெரிவித்து உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

jai ganesh
ஜூலை 25, 2024 11:00

ஸ்பைஸ் ஜெட் இவனுக சரியான நேரத்தில் எடுத்தா தான் ஆச்சர்யம். போட்டிக்கு ஆள் இல்லை. அது தான் இவர்களின் தைரியம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை