உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுவிலக்கு திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல்: முதல்வர்

மதுவிலக்கு திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல்: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பா.ம.க, தலைவர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதில்அளித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nuoyzz8d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்டவற்றை தடுக்க சட்டத்தில் தண்டனைகள் போதுமானதாக இல்லை. தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். விஷசாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

pv, முத்தூர்
ஜூன் 29, 2024 07:14

மதுவை முற்றிலும் தடை செய்ய மசோதா நிறைவேற்றவும்


lana
ஜூன் 28, 2024 23:20

சாராயம் என்பதே விஷம் தான். என்னவோ அரசு விற்பனை செய்வது எல்லாம் உற்சாக பானம் ன்னு நினைப்பு. விஷமம் ஆன ஆளு தான். திருடன் ஆக பார்த்து திருந்த வேண்டும்


S. Narayanan
ஜூன் 28, 2024 22:28

பல மசோதாக்கள் வந்தாச்சு. எல்லாம் ஏட்டில் மட்டும். லஞ்சம் வாங்க கூடாது என்பது சட்டம். யார்வாங்கமல் இருக்கிறார்கள். கண் துடைப்பு. எலக்சன் வருகிறது அல்லவா. அதான்விஷயம்.


சோலை பார்த்தி
ஜூன் 28, 2024 22:27

எல்லா இடத்துலயும். .கள்ள சாராயம் காய்ச்சினா தானா எல்லா மக்களுக்கும் பத்து பத்து லட்சம் போய் சேரும். . விழுப்புரம் கள்ளகுறிச்சி காரங்களுக்கு மட்டும் கிடைக்கிறத தமிழகம் முழுக்க கிடைக்கிற மாதிரி ஏற்பாடு செய்யவும்..


Mannan
ஜூன் 28, 2024 22:22

21 வயது நிரம்பியவருக்கு மட்டுமே மது வழங்க வேண்டும்.நியாய விலைக் கடை போல, பில் போடும் அனைத்தும் கணினி மயமாக்க வேண்டும். ஒருவருக்கு 15 நாளுக்கு ஒருமுறை மட்டுமே என்ட்ரி போட வேண்டும். ஒருவருக்கு விற்கும் அளவும் குறைந்த அளவிலேயே விற்க வேண்டும்.


Mani . V
ஜூன் 28, 2024 22:05

ஆனாலும் டாஸ்மாக்கை மூட மாட்டீர்கள். அதுக்குப் பேர் மதுவிலக்கு இல்லை துண்டு சீட்டு சித்தரே. மது அமுலாக்கம். புரிந்ததா?


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 21:55

சரி. பொன்முடி வழக்கில் அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?.அரசுதானே அவர் குற்றவாளி எனக்கூறி வழக்குப் போட்டது? ஆக என்னதான் கடுமையான சட்டங்களைப் போட்டாலும் அரசும் கோர்ட்டும் மனது வைத்தால்தான் பலனிருக்கும்.( அரசு முறையீடு செய்யாது எனத் தெரிந்தும்தானே கோர்ட் அவரை மந்திரியாக பதவியேற்பு நடத்த வலியுறுத்தியது?)


RajK
ஜூன் 28, 2024 21:29

18 வயதுக்கு கீழே இருப்பவர்கள் குடிக்க கூடாது. குடித்தால் பள்ளியில் டிபார் செய்யப்படுவார்கள் என்று சட்டம் கொண்டு வாருங்கள். சிறார்கள் குடிக்க உதவி செய்பவர்களுக்கு கடும் தண்டனை கொண்டு வாருங்கள். குறைந்தபட்சம் கள்ளச்சாரயத்திற்கு துணையாக இருப்பவர்களுக்கு கட்சியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றாவது கூறமுடியுமா


Bala Paddy
ஜூன் 28, 2024 21:28

காச்சுறதே உடன் பிறப்பு தானே


V GOPALAN
ஜூன் 28, 2024 21:09

Tasmac shop arrack also will be sold at Rs.40 for half litre pocket with 200 gm biriyani


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ