உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்தது நீதி பரிபாலன முறையில் குறுக்கிடும் செயல்!

நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்தது நீதி பரிபாலன முறையில் குறுக்கிடும் செயல்!

சென்னை : நீதிபதியை நேரில் சந்தித்து, சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது, நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவதாகும் என்பதால், அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 'யு டியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவுப்படி, கைது தொடர்பான ஆவணங்களை அரசு தாக்கல் செய்தது. மேல்மட்ட இருவர்குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், 'அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்; அதன்பின், இந்த வழக்கை இறுதியாக விசாரிக்க வேண்டும்' என, நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். வெவ்வேறான உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு, இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை, உடனடியாக விசாரணைக்கு எடுத்தது குறித்து, நீதிபதி சுவாமிநாதன் தன் உத்தரவில், 'மேல் மட்டத்தில் உள்ள இருவர், என்னை நேரில் சந்தித்தனர். தகுதி அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க, அவர்கள் விரும்பவில்லை. 'அவர்கள் என்னிடம் பேசி அழுத்தம் கொடுத்திருக்காவிட்டால், அட்வகேட் ஜெனரல் கூறியபடி, வழக்கமான நடைமுறையை பின்பற்றியிருப்பேன். வழக்கை விசாரணைக்கு ஏற்று, நோட்டீஸ் பிறப்பித்திருந்தால், என்னை சந்தித்தவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கும்.'மேலும், ரிட் விதிமுறைகள் எதையும், நான் மீறவில்லை. ஆவணங்களை பார்த்த மாத்திரத்தில், சட்டவிரோத உத்தரவு என தெரியும்பட்சத்தில், அதை ரத்து செய்யலாம்' என கூறியுள்ளார்.இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்தவர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு அனுப்பி உள்ளார். அதில் 'நீதிபதியை சந்தித்த இருவருக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். அவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். அதற்காக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார்.''நீதிபதியை நேரில் சந்தித்து, அழுத்தம் கொடுத்த செயல், நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவது போலாகும் என்பதால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமனும் கூறியுள்ளார். குறுக்கீடுஇதுகுறித்து, முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியதாவது:குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட, 15க்கும் மேற்பட்ட வழக்குகளில், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கை மட்டும் விசாரணைக்கு எடுத்தது குறித்து, நீதிபதி பதில் அளித்துள்ளார். மேல் மட்டத்தில் உள்ள இருவர் தன்னை சந்தித்ததாக, நீதிபதி கூறியுள்ளார். இந்த செயல், நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவது போலாகும்; நீதிமன்ற அவமதிப்பும் ஆகும். நீதிபதி தங்கி இருக்கும் இடத்தில், பாதுகாப்பு போலீசார் இருப்பர். நீதிமன்றத்தில் உள்ள அறை என்றால், உதவியாளர்கள் இருப்பர். அதனால், தன்னை சந்திக்க வந்தவர்களை, அங்கேயே பிடித்து கொடுத்திருக்கலாம். நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவதாக தான், சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து தண்டனை வழங்கினார். அப்படி இருக்கும்போது, இந்த இருவருக்கு எதிராகவும், அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்.அவகாசம்பொதுவாக, ஆட்கொணர்வு வழக்கில், அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கப்படும். இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரலும், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியும், பதில் அளிக்க அரசை அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார். கள்ளச்சாராய வழக்குகளில், குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கும்போது, அதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த அமர்வில், நானும் இருந்துள்ளேன்.விசாரணைக்கு வந்த நிலையில், குண்டர் சட்ட கைதை ரத்தும் செய்துள்ளோம். ஆனால், அரசு வழக்கறிஞர், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டால், அவகாசம் அளித்து தான் விசாரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி?

ஹிந்து முன்னணி மாநில தலைவர், காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: சமீபத்தில் சவுக்கு சங்கரின் தாய் தொடுத்த வழக்கை, உடனடியாக விசாரிக்கக் கூடாது என்று தனக்கு அதிகாரம் மிக்க நபர்கள் தொடர்பு கொண்டதாக ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார். சில வாரங்களுக்கு முன் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி விழாவில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட இலையில், பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்குவது குறித்த வழக்கில், 'இது சமய நம்பிக்கை நிகழ்ச்சி; இதை யாரும் தடுக்க முடியாது. அரசியல் சாசனம் அளித்துள்ள வழிபாட்டு உரிமைக்கு அரசின் அனுமதி கேட்க வேண்டியதில்லை' என, கூறி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், நீதிபதி சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.க.,வினர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கோர்ட் வளாகத்தில் மிரட்டல் விடுத்தும், உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தும் நீதிபதியை மிரட்டுவது தமிழகத்துக்கு தலைகுனிவு. இத்தகைய போக்கு குறித்து எந்த கட்சியினரும் வாய் திறக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.இத்தகைய செயல்பாட்டை ஹிந்து முன்னணி கண்டிக்கிறது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Palaniappan
மே 30, 2024 22:46

நீதிபதிக்கே அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு சங்கர் பெரிய ஆள் கிடையாது பிளாக்மெய்லர் அவ்வளவுதான் குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவு பிரயோசனம் இல்லாமல் போய்விட்டதே நீதிபதி அறையில் கேமரா இருக்குமே அதை பார்த்தால் தெரியுமே வந்த நபர்கள் யாரென்பது


doss
மே 29, 2024 10:10

யார் சர்வாதிகார ஆட்சி செய்கின்றனர்? உணர வேண்டும். புத்தியுடன் யோசிக்க வேண்டும்.


sankaranarayanan
மே 28, 2024 21:52

இவ்வாறு நீதிபதிகளை அரசியல்வாதிகள் சந்திப்பது மிரட்டுவது என்பது காலம் காலமாக தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான் இது ஒன்றும் புதியது அல்ல இவர்கள் யாரென்றும் மக்களுக்கே நன்றாக தெரியும் கட்சியில் சிறந்த ஆலோசராகவும் உள்ளவர்கள்தான் இவர்கள் யார் என்று விரைவில் நீதிபதியே சொல்லிவிடுவார் பிறகு அவருக்கு பல மிரட்டல்கள் வரும்


Jagan (Proud Sangi)
மே 28, 2024 20:42

GRS மற்றும் ஆனந் வெங்கடேஷ் போன்ற சிலர் கழக ஆட்டத்தில் சேராமல் தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார்கள். இவர்கள் போன்று எல்லா நீதிபதிகளும் இருக்க வேண்டும் . ஜூன் 1 கோர்ட் திறந்த பின் GRS சுவோ மோட்டோவாக இந்த வழக்கை எடுப்பர் என்று நம்புகிறேன். இப்போ கோர்ட் லீவு -வெள்ளைக்காரன் வெய்லுக்கு ஊட்டி இல்ல கொடைக்கானல் போவான் லீவு விட்டான். இவ்வளவு கேஸ் நிலுவையில் இருக்கும் போது கோர்ட்டுக்கு இன்னும் என்ன லீவ் ? AC எல்லா ரூமிலும் போட வசதி இருக்கு, அப்புறம் yen?


K.SIVARAMAN.
மே 28, 2024 17:07

சவுக்கு சங்கர் மீது எப்போ நடந்த நிகழ்ச்சிக்கு இப்போது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க சொல்வது ஆளும்கட்சி மீது சந்தேகம் வருகிறது. ஆளும் கட்சி, அதிகாரிகள் மீது விமர்சனம் வரும் பொழது அரசு தவறை திருத்தி கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தவற்றை கூறுபவர்கள் கண்ணியமான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை நசுக்க கூடாது.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 28, 2024 17:05

நீதிபதிக்கு அழுத்தம் கொடுப்பது இன்று நேற்றா நடக்கிறது. 1967 லேயே துவங்கிவிட்டது. இப்போது இந்த நீதிபதி தெரியாத்தனமாக வெளியே சொல்லிவிட்டார் அவ்வளவுதான். அவர் சொல்லாமல் இருந்திருந்தால் எல்லோரும் நீதித்துறை சரியாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்றே நம்பிக்கொண்டிருப்பார்கள். ஒரு தலைவர் தன் மகளுக்கு ஜாமீனு பிடிப்பதற்காக டெல்லி சென்று பிரதான கட்சியின் தலைவியைப் பார்த்த பின்னர்தானே நீதிமன்றமே அந்த மகளுக்கு ஜாமீனு பிடித்துக்கொடுத்தது. அது அழுத்தம் அல்லாமல் வேறென்ன?


Lion Drsekar
மே 28, 2024 16:58

இன்றைக்கு ஒரு பிரிவினரை இவ்வளவுதான்என்றால் அவ்வளவு இடையூறுகள் செய்வதையே முழுநேர தொழிலாகக் கொண்டு செயல்படுவது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலை. அதன் விளைவு இன்றைக்கு இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நிறைவேற்றும் வகையில் சட்டத்தை தன கையில் எடுத்துக்கொண்டு எந்த எல்லைக்கும் செல்லும் அளவுக்கு சென்றுவிட்டது . நீதியரசரை விமர்சிப்பது தவறு ஆனால் இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு ? நீதியை விமர்சிக்க கூடாது ஆனால் திருப்தி இல்லை என்றால் மேல்கோர்ட்டுக்கு போகலாம் , ஆனால் இவர்கள் கடிதம் எழுதி தங்களுக்கு பிடிக்காததை செய்ததால் சட்டத்தை சுட்டிக்காட்டி பதவிநீக்கம் செய்யவேண்டும் என்ற அளவுக்கு சென்றுவிட்டார்கள். இது ஒன்றும் புதிதல்ல. நீதியரசுருக்கே இந்த கதி என்றால் நாளை இவர்களது கொள்கைக்கு மாறாக அதாவது பரம்பரையாக செய்துவரும் தொழிலிலோ அல்லது எதுவாக இருந்தாலும் அந்த இனத்தையே அளிக்கும் லாவுக்கு செல்வார்கள் . இவர்கள் சீர்திருத்தம் செய்யவேண்டிய இடங்கள் பல உள்ளனவே அங்கெல்லாம் தலையிட்டு மக்களுக்கு நன்மைகளை செய்யலாமே . திருவிழாக்களில் பொதுமக்கள் முன்னிலையில் மிருகவதை , இறந்தவர்களின் சைவம் செல்லும் வழி முழுவதும் மலர்மாலைகளை ரோட்டில் கொட்டுவது அபாயகரமான வெடிகளை வெடிப்பது , போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ... செயல்படுவது ? எத்தினை இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பூக்களின் மீது மெதுவாக சென்றாலும் வழுக்கி விழுந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர் ? சட்டப்படி அடிபட்ட யாருமே எங்குமே புகார் கூறுவது கிடையாது காரணம் புகார் கொடுத்தால் என்ன நடக்கும் என்று தெரியும். அதே போன்று வெடி அவர்கள் எங்கு வைக்கிறார்கள், அது போது எடுக்கும் என்பதே தெரியாது , வெடியை வைப்பவர்கள் தங்கள் நிதானத்தில் இருக்கமாட்டார்கள் , எந்த கூட்டமாக இருந்தாலும் , எந்த வாகனம் என்றாலும் ஒரு வெடி முதல் சாரா வெடிகள் ?? இவைகள் எல்லாம் அனுமதிக்க இவர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் . எது தேவை இல்லையோ, அதற்குள் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி, சட்ட நடவடிக்கை எடுக்க கூட்டம் கூட்டமாக செயல்படுவது நல்லதாக ருந்தால் வரவேற்கலாம், ஆனால் எந்த பதவியில் இருந்தாலும் அவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று கூறுவது இவர்களது சிந்தாந்தம் . இதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைக்கு நிலைக்கு வளர்ந்திருக்கிறது . இதே நிலையை பாதிக்கப்பட்ட இனத்தவர்கள் குரல் கொடுத்தாலே இப்பொவுலகம் இருட்டும் அளவுக்கு புகைச்சலை எழுப்பி ..? என்னத்த சொல்ல . சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியில் இதுவும் ஒன்று .


Selvaraj
மே 28, 2024 15:59

Those two persons who met and influenced the judge will be hoping that their higher ups will also use influence to save them from any consequences.


Selvaraj
மே 28, 2024 15:54

நீதிபதியை எப்படி அந்த இருவர் சந்தித்து பேச முடிந்தது. இப்போது அந்த இருவரும் வயிற்றில் புளியை கரைத்த மாதிரி இருப்பார்கள். இருந்தாலும் அவர்களின் மேல் மட்ட அதிகாரம் மிக்கவர்கள் தமக்கு ஆதரவாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இருப்பார்கள்..


Sridhar
மே 28, 2024 14:41

உடனே அந்த ஆட்களை குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யாமல், ஏன் இந்த சுற்றிவளைப்பு?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ