உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக என்.சி.சி.,க்கு 2ம் இடம்

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக என்.சி.சி.,க்கு 2ம் இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேசிய அளவில் திருச்சியில் நடந்த தேசிய மாணவர் படைகளுக்கு இடையிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், தமிழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது. தேசிய மாணவர் படை இயக்குனரகங்களுக்கு இடையிலான தேசிய துப்பாக்கி சுடும் போட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரி தேசிய மாணவர் படை இயக்குனரகம் சார்பில், திருச்சியில் ஒரு வாரமாக நடந்தது. இதில், 17 இயக்குனரகங்களில் இருந்து, 300 என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற கர்நாடகா, கோவா இயக்குனரக மாணவர்கள், மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் பெற்று, ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் முன்னிலை வகித்தனர். அவர்களை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, அந்தமான் - நிகோபார் பகுதிகளின் இயக்குனரகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மூன்று தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடம் பிடித்து அசத்தினர். இரண்டாமிடம் பிடித்த மாணவர்களுக்கு, தமிழக என்.சி.சி., துணை இயக்குனர் கம்மாடர் ராகவ், கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூலை 15, 2024 05:42

கர்நாடகமும் கோவாவும் இரண்டு இடங்களை கைப்பற்றிய பின்னர் எப்படி தமிழகம் இரண்டாவது இடத்தில வரும்? இரண்டு மாநிலம் முதல் இடம் என்றால் அடுத்தது மூன்றாவது இடம்தான்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ