உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2025 -- 26ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டை சாதனை பட்ஜெட்டாக அறிவிக்க திட்டம் மூளையை கசக்கி அதிகாரிகள் தயாரிப்பு

2025 -- 26ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டை சாதனை பட்ஜெட்டாக அறிவிக்க திட்டம் மூளையை கசக்கி அதிகாரிகள் தயாரிப்பு

சென்னை: தமிழக அரசின் 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட்டை, சாதனை பட்ஜெட்டாக அறிவிக்க, அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு சார்பில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, வரும் 14ம் தேதி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தாக்கல் செய்ய உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e8a34fs3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசின் கடன் ௮ லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் வர உள்ளது.எனவே, அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். தி.மு.க., ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இது.எனவே, நிதிச்சுமை இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், மக்களை கவரும் வகையில், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, அரசின் சாதனை பட்ஜெட் போல் உருவாக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதுகுறித்து, உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தி.மு.க., அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மக்களை கவரும் அம்சங்கள் நிறைந்த, சாதனை பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என, நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டு, இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த பட்ஜெட்டை, தி.மு.க., அரசின், 100வது பட்ஜெட் என, அறிவிக்க திட்டமிடப்பட்டது.அதாவது, நீதிக்கட்சி ஆட்சியில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டில் துவங்கி, இதுவரை எத்தனை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, கணக்கிட்டு அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், 'நீதிக்கட்சி ஆட்சியிலிருந்து கணக்கிட்டால், பட்ஜெட் எண்ணிக்கை, 100ஐ தாண்டி விடும். எனவே, அது வேண்டாம்' என, சில அதிகாரிகள் கூறினர். அதனால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.அதைத்தொடர்ந்து, பட்ஜெட்டில் அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிடுவதுடன், மக்களை கவரும் வகையில், புதிய அறிவிப்புகளை வெளியிட முடிவு செய்யப்பட்டது. சுற்றுலாத்துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட உள்ளது.மகளிர் உரிமை தொகையை உயர்த்துவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோபத்தை தணிக்க, சலுகைகள் அறிவிப்பது உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து, தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு அறிவிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு துறையிலும், புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற முடிவோடு, பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ram
மார் 09, 2025 14:29

மூளையை கசக்கி பட்ஜெட்டா... அது இருக்கா... இல்லாததை எப்படி கசக்குறதாம்.


Sundaresan S
மார் 09, 2025 13:58

மொத்த பட்ஜெட் தொகையில் குறைந்த பட்சம் 20% கழித்து வரும் தொகையில்,30% கழித்து வரும் தொகையில்,15% கழித்து வரும் தொகையே முழுமையான பட்ஜெட் தொகை என்பதை மக்கள் மதில் கணக்கு போட்டு பாப்பாங்கத்தானே?


HoneyBee
மார் 09, 2025 13:21

என்னாது முளையை கசக்கியா... முரசொலி கூமுட்டகளுக்கு புத்தி இருக்கா.. சரி சரி விக்கை சரிபண்ணு


Kasimani Baskaran
மார் 09, 2025 11:03

கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும் .. ஐ மீன் ஒளிக்கப்படும்.. இதே போல பல உருட்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மத்திய அரசு பணமே கொடுக்கவில்லை என்று நிச்சயம் புகார் இருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 09, 2025 10:47

கடன் வாங்குவதில் முன்னணி மாநிலம் என்று பெயரெடுத்த பிறகு, பட்ஜெட்டில் துண்டு விழத்தான் செய்யும் ...... என்ன ஒன்று, அநேகமாக மக்கள் தலையில் புதிய சுமைகள் சுமத்தப்பட்ட வாய்ப்புகள் குறைவு .... மத்திய அரசின் நிதித்துறை மீது பழி சுமத்துவார்கள் .... இந்நிலையில் சாதனை பட்ஜெட்டாக எப்படி அறிவிக்க முடியும் ??


pandit
மார் 09, 2025 07:21

வீட்டுக்கொரு விதவை, பள்ளியில் பாலியல் திட்டங்கள் கண்டிப்பாக இருக்கும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 09, 2025 07:19

அப்படியே பாலியல் வன்கொடுமைகள் கள்ளச்சாராய மரணங்கள் தண்ணீரில் மனித கழிவுகள் கலக்குவது பள்ளிகளில் மனித கழிவு போவது போன்றவற்றிக்கு கூடுதல் நிவாரண தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதிலும் பாலியல் வன்கொடுமைகளில் பிறந்த குழந்தை முதல் காடு வா வா என்று அழைத்து காத்திருக்கும் பாட்டிமார்கள் வரை அவர்கள் செய்யும் தொழில் படிப்பு போன்ற விஷயங்கள் மனதில் வைத்து இழப்பீடு தொகை ஒதுக்க வேண்டும். இந்த பாலியல் வன்கொடுமைகளில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் கலெக்டர் போலீஸ் துறை அதிகாரிகள் வக்கீல்கள் நிருபர்கள் போன்றவர்களுக்கு ஊக்க தொகை வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படியே இதனை மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக சட்டபேரவை சபாநாயகர் அவர்களின் செயற்கை நுண்ணறிவு இடம் அளித்து உலகிலேயே இது வரை தயாரிக்க பட்ட பட்ஜெட்டில் இது தான் சிறந்த பட்ஜெட் என்று மெச்சும் படி செய்து கொள்ளவும்.


நிக்கோல்தாம்சன்
மார் 09, 2025 07:16

9 லட்சம் கோடி தமிழக மக்களின் தலையில் இருக்கும் கடனை திமுக தனது சொத்துக்களை விற்று பைசல் செய்யும் என்ற செய்தி தான் திமுகவின் சாதனை


Subramanian
மார் 09, 2025 05:15

எது அறிவித்தாலும் சாதனை என்று தான் கூறுவார்கள். இதற்கு ஏன் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும்


Kumar Kumzi
மார் 09, 2025 03:29

என்ன தான் கசக்கி பிழிஞ்சி முக்கினாலும் டாஸ்மாக் தான் டார்கெட் ஆக இருக்கும் ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட துண்டுசீட்டு விடியலின் கடைசி ஆட்சியாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை