உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி மீதான குவாரி வழக்கு: மேலும் ஒரு சாட்சி பல்டி

பொன்முடி மீதான குவாரி வழக்கு: மேலும் ஒரு சாட்சி பல்டி

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையில் நேற்று மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்ததால் 'பல்டி' எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அனுமதியை மீறி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0cenbo89&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் அரசு தரப்பில் உள்ள 67 சாட்சிகளில் இதுவரை 24 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 20 பேர் பிறழ் சாட்சி அளித்துஉள்ளனர்.நேற்று நடந்த இவ்வழக்கு விசாரணையில் 25ம் சாட்சியாக ஆஜரான ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் கணபதி, 'உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதன் பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன். எனக்கும் இவ்வழக்கு தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது' என பிறழ் சாட்சியம் அளித்தார். அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என உத்தரவிட்டார்.இதனால், இவ்வழக்கின் பிறழ் சாட்சியின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Narayanan
ஏப் 26, 2024 15:10

அரசியலில் ஊழல்வாதிகள் பணபலம், படைபலம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை வைத்து தனக்கெதிரான ஊழல்வழக்கை உச்சநீதிமன்றம் வரை சென்று நீர்த்துபோகச்செய்ய முடியும் என்பதற்கு பொன்முடி அவர்களே மாபெரும் உதாரணம் பொறுப்புள்ள மக்கள் அனைவரும் அரசியல்வாதிகளின் பணபலம், படைபலம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றிற்கு அஞ்சி தனது வழியை மாற்றிக்கொள்ள வேண்டும் நேர்மையான மக்கள் நியாயம் கேட்டு எங்கு சென்றாலும் மிகவும் போராடிதான் நீதி பெறமுடியும் அதற்குள் அம்மக்களின் மன தைரியமும் குன்றிவிடும்


HoneyBee
ஏப் 25, 2024 15:57

அடுத்து நிரபராதி என சொல்லி விடுதலை


Narayanan
ஏப் 25, 2024 15:10

இதைத்தானே நீதிமன்றமும் எதிர்பார்த்து பொன்முடியை வெளியில் விட்டு, மந்திரியாக்கி இப்படி செய்யச்சொன்னது இவரும் சாட்சிகளை அருமையாக கையாண்டு பல்ட்டி அடிக்க வைத்து வீராமாக உலா வருகிறார் என்னே ஒரு நீதி ?


DARMHAR/ D.M.Reddy
ஏப் 25, 2024 00:21

சாட்சி பல்டி அடித்ததனால் பொன்முடியின் தலையில் கருப்பு சாயம் பூசப்பட்ட முடி வெண்முடியாகி விட்டிருக்குமே இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறதோ யார் கண்டார்கள் ஒருவேளை அஷ்டமத்து சனி தசை அவரது ஜாதகத்தில் வந்து விட்டதோ என்னவோ ஆண்டவனுக்கே வெளிச்சம்


DARMHAR/ D.M.Reddy
ஏப் 25, 2024 00:07

ponmudi வெண்முடியாக்கி vittatho ennavo


M S RAGHUNATHAN
ஏப் 24, 2024 15:57

The Court should ask the hostile witness the Names of the "Senior Officer" who asked him to sign the file implicating the Minister with date and time


VELAN
ஏப் 24, 2024 14:32

சீனாவில் ஊழல் வாதிகளின் சொத்துக்கள் முதலில் பறிக்கப்படும் பின்னர் உடலில் துப்பாக்கி குண்டு பாயும் சட்டம் ஒழுங்கு இருப்பதால் தான் அந்த நாடு யில் உலக ராணுவ பொருளாதார முதல் வல்லரசாக போகின்றது இங்கு இன்னும் உளுத்து போன ஆங்கிலேயன் எழுதிய சட்டம்


Narayanan
ஏப் 24, 2024 12:27

தவறுசெய்தவனை உச்சநீதிமன்றமே முன்னின்று மீண்டும் அமைச்சராக்கி வைத்திருக்கிறது அப்பவே, உச்சநீதிமன்றம் இவருக்கு வெகுவிரைவில் உங்களுக்கு எதிராக இருக்கும் சாட்சிகளை உங்கள் பதவியை பயன்படுத்தி கலைத்து வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கி சிறப்பித்திருக்கிறது


தத்வமசி
ஏப் 23, 2024 22:47

பல்டி அடிக்காமல் என்ன செய்வார் ? சிறையில் களியை திங்க வேண்டியவரை உபசரித்து மீண்டும் அமைச்சராக்கினால் ? ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஒரு நீதி


adalarasan
ஏப் 23, 2024 22:17

பண வசதி,adhikaaram படைத்தவர்களை வெளியில் விட்டால்,saatchikalai கலைப்பது சுலபம்தானே? அடைத்தான் செய்கிறார் ஆச்சரியம் வொன்றும் illai????


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ