உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவுக்கு பட்டா பிரதி கேட்க தடை: சார் பதிவாளர்களுக்கு உத்தரவு

பத்திரப்பதிவுக்கு பட்டா பிரதி கேட்க தடை: சார் பதிவாளர்களுக்கு உத்தரவு

சென்னை : 'சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும்போது, பட்டா, நில வரைபடம் ஆகியவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண்டாம்' என, சார் பதிவாளர்களுக்கு பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.தனியார் பெயரில் பட்டா உள்ள சொத்துக்கள் விற்பனைக்கான கிரையப் பத்திரங்கள் பதிவு செய்யப்படும். இதில் கிரையப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் உண்மை தன்மையை சரிபார்க்க, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.வருவாய் துறையில், இ - சேவை இணையதளத்தில், 'தமிழ் நிலம்' மென்பொருள் வாயிலாக பட்டா பிரதிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், ஆன்லைன் தொகுப்பில் இருந்து பிரதி எடுத்து, 'அட்டெஸ்டேஷன்' எனப்படும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று வருமாறு, சார் பதிவாளர்கள் மக்களை வற்புறுத்துகின்றனர்.இதனால், சொத்து வாங்குவோர் பட்டா பிரதி எடுக்கவும், அதற்கு கையெழுத்து வாங்குவதற்காகவும் அலைய வேண்டியுள்ளது. பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைன் முறையில் கிடைக்கும்போது, அதை பிரதி எடுத்து வர சொல்வது தேவையில்லாத வேலை என தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, பதிவுத் துறைக்கு நில அளவை துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதன் அடிப்படையில், பதிவுத் துறை பிறப்பித்துள்ள உத்தரவு:பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும்போது, பட்டா, சிட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண்டாம். இந்த சொத்துக்களின் சர்வே எண்ணை பயன்படுத்தி, வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் பட்டா விபரங்களை, சார் பதிவாளர்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் காகித பிரதி கேட்டு, பொது மக்களை அலைக்கழிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரேகை பதிவில் மாற்றம்!

சொத்து விற்பனையின்போது, 'ஆதார்' வாயிலாக, சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது. இதற்காக, விண்ணப்பதாரரின் விரல் ரேகை பதிவு செய்யப்படும்.இது தொடர்பாக, பதிவுத் துறை பிறப்பித்துள்ள உத்தரவு:ஆதார் ஆணைய பரிந்துரைப்படி, எல்.ஓ., எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாட்டை, செப்., 30ல் நிறுத்த போவதாக, ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.இதற்கு பதிலாக, 'எல்1' என்ற புதிய விரல் ரேகை பதிவு கருவிகளை, அக்., 1 முதல் பயன்படுத்த, ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 'எல்காட்' மின்னணு கழகம் வாயிலாக, புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. 'ஸ்டார் 2.0' மென்பொருளில், இந்த புதிய கருவியை இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில், 'எல்1' கருவியில் விரல் ரேகை விபரங்களை சேமித்து வைக்கும் வசதி இல்லை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும், எல்.ஓ., கருவியையும் சேர்த்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால், அக்., 1 முதல். இந்த இரண்டு கருவிகளிலும் விரல் ரேகை பதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Joe Rathinam
செப் 22, 2024 16:05

பத்திரப்பதிவை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும். பத்திரத்தில் அச்சிட்டு கையெழுத்திட்டு பதிவதை முழுமையாக நிறுத்த வேண்டும். அப்போது தான் ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்வதை நிறுத்த முடியும். அதாவது பங்கு சான்றுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது போல.


Jagadeeswaran Deenan (Jaga)
செப் 18, 2024 19:22

இணைய தளம் பட்டா வாங்க விண்ணப்பம் செய்து பல முறை வட்டாட்சியர் அலுவலகம் சென்று பயனில்லை இது சரியான முடிவு இனியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் மற்றும் லஞ்சம் ரூபாய் இருபதாயிரம் முதல் ஒரு இலட்சம் இதற்கு தீர்வு இந்த அரசு கண்டால் நன்று அது நடக்குமா?


vkpuram madhavan
செப் 18, 2024 12:25

சுய சான்றழித்த பட்டா பெற்று அதை கணினியில் தமிழ்நிலம் தகவல் தரவுத் தொகுப்பில் சரிபார்த்து சான்றளித்து இரண்டையும் ஆவணங்களாக இணைத்து பத்திர பதிவு செய்யலாம்.


R. THIAGARAJAN
செப் 18, 2024 11:56

Once the registration completed in all accordance it can be forwarded to the concerned VAO and the RI and Surveyor through online and all of them must confirm the genuiness of the property and its registration will be easier than for the necessary name transfer and the patta transferred. Also it must be published in both the registration and revenue department website. It will be solved all such forgery and illegal registration and illegal patta etc. No more delay and no more bribe etc. T N Government must appoint a dedicated committe under the heads of both district collector and the retired Government Judge to solve all such land disputes within tentative time limits. Court litigations and its valume becomes reduced.


Annamalai Al
செப் 18, 2024 11:20

இது அருமையான உத்தரவு. கையில்வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அழைய விடுவது….


Pragalaathan
செப் 18, 2024 11:09

அய்யா நீங்க சொல்ற மாதிரி தாசில்தார் எல்லாம் பத்திர பதிவ சரிபார்த்து அட்டெஸ்டேஷன் பன்னன்னும்ன்ன முடித்தது கதை. எவ்வளோ லஞ்சம் கொடுக்கணும். அலையணும். அப்பாப்பா


Pragalaathan
செப் 18, 2024 12:23

அய்யா நீங்க சொல்ற மாதிரி தாசில்தார் எல்லாம் பத்திர பதிவ சரிபார்த்து அட்டெஸ்டேஷன் பன்னன்னும்ன்ன முடித்தது கதை. எவ்வளோ அலையணும். அப்பாப்பா


GMM
செப் 18, 2024 07:43

பத்திர பதிவு துறை நாளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து வருகிறது. நில மோசடி உச்சத்தில் உள்ளதா ?பதிவாளர் வில்லங்கம் பார்த்து பதிவது இல்லை. ? ஆன்லைன் தொகுப்பில் பிரதி எடுக்க சிரமம் / அலைய வேண்டி இருக்குமா ?அட்டெஸ்டேஷன் ஒன்றும் பெரிய வேலை இல்லை. தந்தை இறந்த பின் வாரிசுக்கு பட்டா தானே மாறாது . பாக பிரிவினை, உட்பிரிவு போன்றவை அப்டேட் செய்ய வேண்டும். நான்கு திசையில் உள்ள உரிமையாளர்கள் மாறி இருக்கும் . வார்டு தெரு பெயர் , கதவு இலக்கம் மாறிக்கொண்டு இருக்கிறது. பதிவு நாளன்று இந்த விவரங்கள் பொருந்த வேண்டும். தற்காலிக பத்திர பதிவு செய்து, நிரந்தர பத்திர பதிவை ஒரு மாதத்தில் தாசில்தார் , முனிசிபல் ஆணையர் ஒப்புதல் பெற்று வழங்க வேண்டும்.


Madhavan
செப் 18, 2024 06:56

இது எந்த விதத்தில் ஊழலையும், போலி பத்திரப் பதிவுகளையும் தடுக்கும் எனப் புரியவில்லை. நிலம், மனை வாங்குபவர் நில உரிமையாளரிடம் உள்ள அசல் தஸ்தாவேஜூகளைப் பெற்றுக் கொள்ளும்போது அதன் நகல்கள் கிரையப்பத்திரத்துடன் இணைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இது அவசியமில்லை எனில் போலிப் பத்திரப் பதிவுக்கு வழி வகுக்கும். அதாவது கணிணி வரும் முன்பாக இருந்த நிலைமைக்கு இட்டுச் செல்லும். அடியேன் அறிந்த வரை விற்கப்பட்ட அநேக மனைகளில் உரிமையாளரின் பெயர் மாற்றம் பட்டா, சிட்டாவில் நிகழ்வதில்லை.கணிணி மூலம் பெற இயலவில்லை. விஏஓ வைப் பார்க்கச் சொல்கிறார்கள். மனை வன்முறைப் படுத்தப்பட்டு விட்ட பின்னரும் கணிணியில் பட்டா பெயர் மாற்றம் இல்லை. உங்கள் பெயரில் பட்டா இல்லாத போது எப்படி பத்திரப் பதிவு நடக்கும்? ஆனால் இதற்கு வசதியாக ரூல்ஸை மாற்றுகிறார்கள் என்றால் இதில் உள்நோக்கம் இருக்கலாம்.யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள்.


Pragalaathan
செப் 18, 2024 11:16

அதில் என்ன சொல்ல வராங்கன, பட்டா EC எல்லாம் atation வாங்க தேவையில்லை. நகல் கொடுத்தாலே போதும். நகலில் உள்ளதை பத்திர பதிவு அலுவரரே ...தளத்தில் சரிபார்த்து கொள்ள வேண்டும். நல்ல விஷயம்.


Kasimani Baskaran
செப் 18, 2024 04:59

இப்பொழுதாவது பச்சை மை, கேசட்டெட் ஆபிசர் போன்றவர்களை சுற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது சற்று ஆறுதல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை