வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ATM இல் பணம் நிரப்ப காரில் செல்லமாட்டார்கள். அதற்கான பாதுகாப்பு வேனில் பாதுகாப்புடன் செல்வார்கள். உள்குத்து வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.
கோழிக்கோட்டில் என்றதும் வாசகர்கள் உடனே புலன் விசாரணை ஆரம்பிச்சுட்டாங்க. இதுவே பா ஜ க ஆட்சி நடக்கிற மாநிலமாக இருந்தால்... இந்த பக்கம் காலியா இருக்கும். வங்கிகள் ஒன்றிய அரசின் கீழ் வருகின்றன. மாநில போலீஸ் காவலை எந்த வங்கியும் வைத்துக் கொள்வதில்லை ன்னு கூடத் தெரியாம....
கண்ணால் காண்பதும் பொய் .காதால் கேட்பதும் பொய். கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் .
சந்தேகத்துக்கு இடமளிக்கும் கூட்டுக்கொள்ளை. யார்யார் சம்பந்தம் என்பது விசாரணையில் கண்டுபிடிக்க வேண்டும்.
அது என்ன கேரளாவில் மட்டும் ஏடிஎம் கொள்ளை அதிகமாக நடக்கிறது. அங்குள்ள காவல்துறையினர் அந்த அளவுக்கு எதற்கும் லாயக்கில்லாதவர்கள் போல் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் ஒரு மிகப்பெரிய ஏடிஎம் கொள்ளை கேரளாவில் நடந்தது. அதன் பிறகாவது அங்குள்ள காவல்துறையினர் மிக எச்சரிக்கையாக பணிபுரிய வேண்டாமா...?
"மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்" ...மர்ம நபர்களா புரிந்து விட்டது யார் செய்திருப்பார்கள் என்று....
கார் கண்ணாடி திறந்து வைக்கப்பட்டிருந்தது இல்லை வந்தவர்கள் கார் கண்ணாடியை உடைத்தார்களா கார் கண்ணாடி உடைக்கும் வரை துப்பாக்கி ஏந்திய நபர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்?
காரில் இருந்தவர்கள் யார் என்பது செய்தியில் இல்லை . அவர்கள் ஏ ட்ட எம் இல் பணம் கட்ட வங்கி ஊழியராக இருக்கலாம். உள்ள இருந்த எல்லோரும் ஊழியரா என்பதும் தெரியவில்லை. வழிமறிக்க வந்தவர்கள் மிளகாய் பொடி வைத்துஇருந்தார் என்றால் எப்படி?
கதை. துப்பாக்கி ஏந்திய காவல் என்னவாயிற்று? முறையாக விசாரித்தால் உண்மை தெரியும்.
மேலும் செய்திகள்
மொபட்டில் வைத்திருந்த ரூ.3.43 லட்சம் திருட்டு
24-Sep-2024