உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலற விடும் கஞ்சா கும்பல்: இரு அமைச்சர்கள் இருந்து என்ன பயன்?

அலற விடும் கஞ்சா கும்பல்: இரு அமைச்சர்கள் இருந்து என்ன பயன்?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பைக்கில் மர்ம நபர்கள் சில நாட்களாக, கையில் அரிவாள் ஏந்தி, வர்த்தகர்கள், பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். இது குறித்து, சமூக ஆர்வலர்கள், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பலர் ஆலங்குடி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.நேற்று மாலை, 5:00 மணி அளவில் ஆலங்குடி அரசமரம் பகுதியில் வீச்சரிவாளோடு இரு மர்ம நபர்கள், மத்திய கூட்டுறவு வங்கி ஏ.டி.எம்., அருகில் உள்ள பெட்டி கடை, ஜவுளி கடை, பூக்கடை, டீக்கடை மற்றும் சாலையோரம் இருந்த பைக்குகளை அரிவாளால் அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் அங்கும், இங்கும் ஓடினர். ஆலங்குடி வர்த்தகர்கள் பதற்றத்திலும், பயத்தோடு கடைகளை அடைத்து ஓடினர்.ஆலங்குடி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக புழங்குகின்றன. போலீசாருக்கு தெரிந்தும், இதுவரை போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீதும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்வதால், ஆலங்குடியில் போதை பேர்வழிகளும், ரவுடிகளும் வளர்ந்து வருகின்றனர்.சட்டத்துறை அமைச்சர் மாவட்டம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தொகுதியில் இவ்வாறு நடைபெறும் அராஜகங்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
ஜூலை 01, 2024 16:05

அய்யா தேடி தேடி ஒட்டு போட்டீங்களே அப்போ தெரியலையா பாவம்


RAMESH
ஜூலை 01, 2024 11:36

அய்யா ரகுபதி அவர்களே புதுக்கோட்டை தமிழ்நாட்டில் தான் உள்ளது....அதுவும் உங்கள் ஊர்


Mani . V
ஜூலை 01, 2024 05:07

இதை விற்கும் முதலாளியே அவர்களாக இருந்தால்?


மேலும் செய்திகள்