உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : 'ஒட்டுமொத்த செஸ் உலகமும், பிரக்ஞானந்தாவின் திறனையும், சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: நார்வே செஸ் தொடரில், இளம் வீரர் பிரக்ஞானந்தா முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மூன்றாம் சுற்றில், உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்ல்சனை வென்றார். ஐந்தாம் சுற்றில், உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும், 'கிளாசிக்கல் செஸ்' வகை போட்டியில் வீழ்த்தியிருப்பது மிகப்பெரும் சாதனை.இதன் வாயிலாக, 'டாப் - 10' தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் பிரக்ஞானந்தாவின் வரவு நல்வரவாகட்டும். ஒட்டுமொத்த செஸ் உலகமும், பிரக்ஞானந்தாவின் திறனையும், சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை