உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்; நாசா சொல்வது இதுதான்!

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்; நாசா சொல்வது இதுதான்!

வாஷிங்டன்: 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம்' என நாசா விளக்கம் அளித்துள்ளது.இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் அவரும், பேரி வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி உள்ளனர். அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் எடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசியில் ஸ்டார்லைனரில் விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவது மிகவும் ஆபத்தானது என்று விண்வெளி நிறுவனம் அறிவித்தது. சுனிதா, வில்மோர் இல்லாமலேயே கடந்த செப்டம்பரில் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்பியது.இதையடுத்து இருவரையும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் பூமிக்கு அழைத்து வர நாசா முடிவு செய்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவேன் என உறுதி அளித்தார். சில தினங்களுக்கு முன், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோரும் எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ல் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்து இருந்தது.

மீண்டும் சிக்கல்!

இந்நிலையில், 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை அழைத்து வர புளோரிடாவில் டிராகன் விண்கலத்துடன் சீறி பாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில், கடைசி நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.18 மணிக்கு டிராகன் விண்கலத்தை ஏவ இருந்த நிலையில் கடைசி நிமிடம் ஏற்பட்ட கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது.

நாசா விளக்கம்

இது குறித்து நாசா கூறியதாவது: சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம். சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர மீண்டும் ராக்கெட் ஏவக் கூடிய தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு நாசா விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

B MAADHAVAN
மார் 13, 2025 20:41

பாவங்க அந்த இரண்டு பிள்ளைகளும். சோறு தண்ணீர்க்கு என்ன பண்ணுவாங்க. கொஞ்சம் அரிசி, பருப்பு ,உப்பு, புளி, மிளகா போன்ற மாதாந்திர மளிகை சாமான்கள் அல்லது பிஸ்ஸா, பர்கர் போன்ற பிடித்த தின்பண்டங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய மாத்திரை வடிவில் சோறு தண்ணீர் கொடுத்து விடுங்கப்பா ஏதாவது ஸ்விக்கி, Zomato மூலம் ... பாவம். பிள்ளை குட்டிகாரங்க. பிழைத்துப் போகட்டும்.


SP
மார் 13, 2025 17:28

அவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கு பிரார்த்திப்போம்


Karthik
மார் 13, 2025 13:23

செவ்வாய் கிரகத்துக்கு தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி ஒருவழிப் பயணமே


தமிழன்
மார் 13, 2025 12:10

எலான் மஸ்க் தொட்டது ஏதாவது ஒன்னாவது வெளங்கியிருக்கா? கார் தீ புடிச்சு எரியிது, ராக்கெட் வெடிக்குது, எக்ஸ் கம்பெனி ஊழியர்கள் எந்த நொடி வேலை பறிபோகுமோ என பயந்து வேலை செய்கிறார்கள், இப்போது இது நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ்ம் சேர்ந்து 2 பேருக்கும் அங்கேயே தங்க பாஸ்போர்ட் கொடுத்து விட்டதுகள் பாவம் இது குறித்து முன்பே தெரிந்திருந்தால் எலான் மஸ்க் அங்கேயே ஒரு டீ கடை வடை பஜ்ஜியுடன் பிசினசையும் ஆரம்பித்திருப்பான்


Senthoora
மார் 13, 2025 15:11

அந்தக்கடைக்கு நம்ம நாட்டில் இருந்து போய் , திறந்து வைப்பார். அந்த நாட்டுக்குத்தான் இன்னும் போகவில்லை.


Appa V
மார் 13, 2025 21:51

டாஸ்மாக்கே கதி என்று கிடந்தால் இப்படி தான் யோசிக்க தோணும்


Ganapathy
மார் 13, 2025 10:57

நமது புராணங்களில் கூறப்படுகின்றன புஷ்பக விமானத்தை கிண்டல் கேலி ஏளனம் செய்யும் செகுலர் கிறிஸ்தவ மிஷனரிகள் இப்ப ஏன் வாயே தொறக்கலை? இது தான் நவீன பகுதறிவுவாத ஞாஸ்னாம் செய்து கிறிஸ்துவால் ஆசீர்வதிகப்பட்ட வில்லியம்ஸை சுமந்து கொண்டு வைன் பாட்டிலால் ராக்கெட்டை அடிச்சு நல்ல சகுனத்தில் ஏவப்பட்ட விஷயமாச்சே...


Karthik
மார் 13, 2025 10:16

1 Year Warranty plus Guaranteed..


vbs manian
மார் 13, 2025 09:53

எந்த ராக்கெட் விஞானம் இவரை பரந்த வெளிக்கு அழைத்து சென்றதோ அதே தொழில் நுட்பம் திரும்ப பூமிக்கு அழைத்து வரமுடியவில்லை. சொந்த பந்தம் குடும்பம் எல்லாம் அந்நியம் ஆகி விண்வெளியில் தவிக்கிறார்.


Shankar
மார் 13, 2025 09:15

அமெரிக்கா 2 மனிதரை சந்திரனில் ஆய்வுக்காக அனுப்பியது என்பது ஜோடிக்கப்பட்ட பெரும்போய். அந்த ஜோடனையின் ஒருவன் கிருத்துவதிலிருந்து இஸ்லாமியத்துக்கு மாறியபோது "சந்திரனுக்கு சென்று திரும்பியவனே இஸ்லாமியத்தை ஏற்றுக்கொண்டான் என்று தன்னை தானே அறியாமையால் ஏமாற்றிக்கொண்டனர். எல்லாம் வல்ல இறையானது மனித சரீரத்தை, பூமிக்கு மட்டுமே கச்சிதப்படுத்தியுள்ளது.


Kalyanaraman
மார் 13, 2025 08:19

அனுப்பிய இருவரையும் திருப்பி அழைத்து வர முடியாமல் தவிக்கும் போது சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் எப்படி மக்களை அழைத்து செல்வார்களோ??


Appa V
மார் 13, 2025 07:39

இந்த விண்வெளிவீரர்கள் இருவரும் பூமிக்கு வந்தவுடன் நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள் என்று சொல்கிறார்கள்


Karthik
மார் 13, 2025 10:15

அது முற்றிலும் உண்மை..


Pandi Muni
மார் 13, 2025 11:37

பூமிக்கு திரும்ப வருவார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை