உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்களின் நிலை இந்திய கம்யூனிஸ்ட் கவலை

தமிழக மீனவர்களின் நிலை இந்திய கம்யூனிஸ்ட் கவலை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:துாத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஜூலை 21ம் தேதியும், 23ம் தேதி மேலும் 10 மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கரை திரும்பும் போது, இலங்கை கடற்படையினரால் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் மீதான வழக்கை விசாரித்த, கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம், முதலில் படகில் சென்ற 12 மீனவர்களுக்கு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது. மற்றொரு படகில் சென்ற 10 மீனவர்கள் மீதான வழக்கில், இந்திய துாதரகம் தலையிட்டுள்ளதால், அதன் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்ற, மத்திய அரசின் உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை. இப்போது இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்களை தண்டனை விதித்து தாக்குதல் நடத்தும் நிலைக்கு சென்றிருப்பது பெரும் கவலையளிக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை