மேலும் செய்திகள்
30 சதவீத ஊதிய உயர்வு பஸ் ஊழியர்கள் எதிர்பார்ப்பு
12-Feb-2025
சென்னை:'தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு, போதிய நிதி ஒதுக்கக் கோரி, வரும் 6ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும்' என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.இது குறித்து, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டமைப்பு விடுத்த அறிக்கை:புதிய ஊதிய பேச்சு தொடர்பான அறிவிப்பு இல்லாத நிலையில், அடுத்த மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்கள், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை மறுக்கப்படுகின்றன. இதற்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு, அரசு போதிய நிதி வழங்காததே காரணம். கடந்த 2022ம் ஆண்டு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க, குழு அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இது வரை நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, வரும் பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களின், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு, உரிய நிதியை ஒதுக்க வலியுறுத்தி, வரும் 6ம் தேதி, சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து, கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும். அரசிடம் நிதி பெறுவது தான் அனைத்து பிரச்சினைக்குமான தீர்வு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12-Feb-2025