உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்? அரசின் பெயர் மாற்றத்தால் எழும் புதிய கேள்விகள்

கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்? அரசின் பெயர் மாற்றத்தால் எழும் புதிய கேள்விகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊர் மக்களுக்கு சொந்தமானதாக, குடியிருப்பு பயன்பாட்டில் இருக்கும் கிராம நத்தம் நிலங்களை, 'ரயத்துவாரி மற்றும் சர்க்கார்' என, பெயர் மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட அளவு நிலங்கள், நலிவடைந்த மக்களின் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் பழக்கம் இருந்தது.இதன் அடிப்படையில், கிராமத்தின் மொத்த நிலத்தில் குறிப்பிட்ட அளவு ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும்.இந்நிலங்களுக்கு கிராம அளவில், ஒரு சர்வே எண் மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால், இந்த நிலங்கள் குறித்த உரிமை விபரங்களை, வருவாய் துறையின் பதிவேடுகளில் தெளிவாக குறிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை, 2023 மே 4ல் அரசாணை பிறப்பித்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கிராம நத்தம் நிலங்களை பதிவேடுகளில் குறிப்பிடுவதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே மாதிரியான பெயர் பயன்படுத்தப்படாத நிலையில், நத்தம் நில விபரங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

பிரச்னை

இதை கருத்தில் வைத்து, கிராம நத்தம் நிலங்களை, ரயத்துவாரி மற்றும் சர்க்கார் என, இரண்டு பெயர்களுக்குள் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பயன்பாட்டில் உள்ள கிராம நத்தம் நிலங்கள், என்ன பெயரில் இருக்க வேண்டும் என்பது தனியே பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி, தனியார் பெயரில் பட்டா உள்ள கிராம நத்தம் நிலங்கள், மனைகள் ஆகியவை, ரயத்துவாரி மனைகள் என்று வகைப்படுத்தப்படும். நத்தம் வகைப்பாட்டில், பொது பயன்பாட்டில் உள்ள சாலைகள், கோவில், பூங்கா, இடுகாடு போன்றவை, சர்க்கார் புறம்போக்காக வகைப்படுத்தப்படும்.தனியார் பெயரில் பட்டா இல்லாத காலி நிலம், காலி மனையாக உள்ள நத்தம் நிலங்கள், ரயத்துவாரி மனையாக வகைப்படுத்தப்பட்டாலும், அது தொடர்பான பரிமாற்றங்கள் முடக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அரசு பிறப்பித்துள்ள இந்த ஆணை, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. பல இடங்களில் பொது பயன்பாட்டில் உள்ள நத்தம் நிலங்கள், ஊர் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இந்த நிலங்களை ஊர் மக்கள் பொது தேவைக்காக பயன்படுத்த வாய்ப்பு இருக்கும். தவிர்க்க முடியாத சூழலில், அரசு திட்டங்களுக்கு தேவைப்படும் போது ஊர் மக்களிடம் இருந்து இந்நிலங்கள் பெறப்படும்.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் தர்மராஜன் கூறியதாவது:

கிராம நத்தம் நிலங்களுக்கு தனித்தனி சர்வே எண்கள் ஒதுக்கப்படாத நிலையில், அவை குறித்த விபரங்களை, பதிவேடுகளில் சேர்ப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதற்காக, கிராம நத்தம் நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு, 1985ம் ஆண்டு அரசாணை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.இதில், தனியார் பயன்பாட்டில் உள்ள நிலங்கள் கண்டறியப்பட்டு, அதில் வசிப்போருக்கு பட்டா வழங்க, அரசு முடிவு செய்தது. பட்டா வழங்கும் போது, இந்நிலங்களை முறையாக பதிவேடுகளில் சேர்ப்பதில் பெயர் குழப்பம் ஏற்படாமல் இருக்க, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.தமிழகம் முழுதும் ஒரே மாதிரி பெயரில் குறிப்பிட வேண்டும் என்பதே, இதன் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.

எழும் கேள்விகள்

சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது:l இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, தற்போது தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலங்கள் மட்டுமே ரயத்துவாரி மனைகளாக மாறும். இந்நிலங்களை, இதன் உரிமையாளர்கள் மற்ற நிலங்களை போன்று வணிக பயன்பாட்டுக்கு மாற்றலாமா? l இதுவரை பட்டா வாங்காமல், கிராம நத்தம் நிலங்களில் வீடு கட்டி வசிப்போருக்கு, அந்த நிலத்தின் மீதான உரிமை என்னவாகும்? l நத்தம் செட்டில்மென்ட் பகுதிகளில், பொது பயன்பாட்டில் உள்ள நிலங்கள், சர்க்கார் புறம்போக்கு வகைப்பாட்டில் மாற்றப்படுவதால், எதிர்காலத்தில் இதன் தனித்தன்மை என்னவாகும்?l கிராம நத்தம் நிலங்களை பதிவேடுகளில் குறிப்பிடுவதில், ஒரே சீரான பெயரை அதிகாரிகள் பயன்படுத்தாததற்கு யார் காரணம்?ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக என்ற நத்தம் நிலங்களின் தனித்தன்மை, எதிர்காலத்தில் என்னவாகும்?இந்த அரசாணையால், கிராம நத்தம் நிலங்கள் அரசின் ஏகபோக உரிமையில் உள்ளதா; மக்களுக்கான பொதுச்சொத்தா? என, இது போன்ற கேள்விகள் எழுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்ற கருத்து என்ன?

கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி, நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளில் எழுப்பப்பட்டுள்ளன.இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகள்:l வீட்டு மனையாக தனி நபர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராம நத்தம் நிலங்கள், அரசின் சொத்து அல்லl கிராம நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலத்தை, ஒருவர் விவசாய பயன்பாட்டுக்கு மாற்றியதாலேயே, அதை கையகப்படுத்த, அரசுக்கு உரிமை உண்டு என்று கருத முடியாது l ஒரு சொத்து கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலையில், அதில் அரசு உரிமை கோர வழி இல்லைl அரசு புறம்போக்கு, கிராம நத்தம் ஆகியவை ஒரே பொருள்படும் வார்த்தைகளாக கருத முடியாதுl கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருத முடியாது. இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அகற்ற, அரசுக்கு அதிகாரம் இல்லை.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

muralimanohar vairamuthu
செப் 30, 2024 20:34

நாங்கள் 35 வருஷம் நத்தம் மனையில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறேன். இப்போது எங்க வீட்டுக்கு எதிர்ல இருக்குறவங்க ஒரு பழைய பட்டா வச்சு அதுல உங்க இடம் எங்க பட்டாவில் இருக்கு என்று கோர்ட்ல கேஸ் போட்ருக்காங்க... இதுனால பயமா இருக்கு... கோர்ட் ல ஆர்டர் வந்தா வீட்டை இடுத்து விடுவார்களா?... தயவுசெஞ்சு எனக்கு ஏத்தாது உதவி பண்ணுங்க... இதை பற்றி தகவல் தெரிந்தால் எனக்கு சொல்லுங்க 7092608376 இது என்னோட நம்பர்


M VASAN
மே 24, 2024 15:41

வருவாய்த்துறையில் வேலை பலுவுக்கு தகுந்த மனித வளம் இல்லை . பல அலுவலகங்களில் ஷாட் டவுன் என்று மின்சாரம் நிறுத்தப்பட்டால், மின்சாரதிர்க்கானா மாற்று ஏற்படு கூட இல்லை. இதனால் நிலங்கள் வகைப்பாடை கிராம கணக்குகளிலும் , புதிய செட்லேமெண்டுகளிலிருக்கும் மாறி மாறி தவறாக பதிவேற்றி இருக்கிறார்கள் . இதனையே முதலில் சரி செய்ய வேண்டியது உள்ளது . மேலும் மக்கள் பலரின் கருத்துக்கள் கேட்டு எடுக்கும் முடிவுகள் உண்மையான ஜனநாயகத்தை உறுதி படுத்துவதோடு , தவறுகளும் ஏற்படாது .மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு


GMM
மே 22, 2024 08:40

பொது பயன்பாட்டில் சாலை, பூங்கா, சரி கோவில் எப்படி சர்க்கார் நிலம் ஆகும்? வழிபாட்டு தலங்கள் அந்த கடவுள் மீது நம்பிக்கை வைத்து தான் உழைத்த, பூர்விக சொத்து தானமாக கொடுக்கப்பட்டு இருக்கும் சிறுபான்மை மதத்திற்கு ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்க பட்டு வருகின்றன? சர்க்கார் நிலம் அரசியல்வாதிகள் நிலமாக மாறிவிடும்


Arun Chalam
மே 22, 2024 08:30

good


Suriyanarayanan
மே 22, 2024 08:08

நத்தம், அரசு நிலம், கோயில் நிலம், அனாதி நிலம் போன்றவைகள் மக்கள் வரிகள் கட்டி பத்திர பதிவு செய்து பல தல முறைகளாக வாழ்ந்து வரும் நம் நாட்டின் மக்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் இந்த அரசு பாதுகாக்க வேண்டும் இனியாவது பிறகு அரசு விழிப்புணர்வோடு இரூக்க வேண்டும் கணினி காலத்தில் பத்திர பதிவு துறையில மாற்றம் தேவை, எப்படி பாஸ்போர்ட் எடுப்பது, ரெனிவல் செய்வது, போன்ற அமைப்பு தேவை உள்ளது, ஒவ்வொறு பத்திரம் பதிவில் நம்பர் டிஜிட்டல் நம்பர் கொடுக்கலாம், உரிமை உள்ள நிலமோ, வீடோ உள்ளவர்களுக்கு ஒட்டிபி மூலம் தகவல் கொடுக்க வேண்டும் வங்கிகள் நடைமுறையும் பின்பற்ற வேண்டும் இப்படி கடுமையான கணினி துணைகள் கொண்டு வரவேண்டும் நன்றி


Mani . V
மே 22, 2024 07:21

அந்த ஊழல் குடும்பத்துக்குத்தான் சொந்தம்


rama adhavan
மே 22, 2024 07:16

கோவில் நிலம் எப்படி அரசு நிலமாகும்? அவை கடவுளுக்கு சொந்தம் அல்லவா? கடவுளை ஒரு தனி ஆளாகத்தானே சட்டம் சொல்கிறது? எதிர் காலத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்கள் எடுக்கப்பட்டால் நிலம் அரசுக்கு சொந்தம் என அரசு நீதிமன்றம் சொல்லுமே? எனவே இப்போதே நீதிமன்றம் செல்வது சிறந்தது


Kasimani Baskaran
மே 22, 2024 06:59

நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஒருவர் ஆக்கிரமித்து சில நிபந்தனைகளின் அடிப்படையில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரி செலுத்தும் பட்சத்தில் பட்டா வாங்கி அனுபவிக்க முடியும் புதிய முறையில் வகைப்படுத்தும் பட்சத்தில் பல புது வகை சிக்கல்கள் மூலம் பணம் சம்பாதிக்க சிலர் முயல வாய்ப்புண்டு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை