| ADDED : ஜூன் 04, 2024 01:28 AM
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் வில்லியம் வேளாங்கண்ணி, 30. கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி அற்புதமேரி, 27. ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். வில்லியம் வேளாங்கண்ணி, அடிக்கடி குடித்துவிட்டு, போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.வழக்கம்போல நேற்று முன்தினம், கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், அற்புதமேரி தாய் வீட்டுக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினார். அப்போதும், கணவன் குடிபோதையில் படுத்திருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த அற்புதமேரி, அருகில் இருந்த அம்மிக்கல்லை துாக்கி, கணவன் தலையில் போட்டுக் கொன்றார்.போலீசில் சரணடைந்த அவரை வையம்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.