உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி வழக்கு கோர்ட்டில் 1,350 பேர் ஆஜர்

செந்தில் பாலாஜி வழக்கு கோர்ட்டில் 1,350 பேர் ஆஜர்

சென்னை : போக்குவரத்துத் துறையில் பணி நியமனங்களுக்காக மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், 2,100க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். நீதிபதி சி.சஞ்சய்பாபா முன், நேற்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி ஆஜரானார். இதையடுத்து நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் மேலும், 150 பேருக்கு 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் 1,500 பேருக்கு, சம்மன் அனுப்பப்பட்டு, 1,350 பேர் இதுவரை ஆஜராகியுள்ளனர். இதேபோல செந்தில் பாலாஜி தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இருவர் விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க, அமலாக்கத் துறைக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் அவகாசம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thravisham
அக் 09, 2025 07:18

நடப்பது விஞ்ஞான ஊழல் வாரிசு திருட்டு ஆட்சி. அடுத்த முறை இன்னொரு 5000 பேருக்கு சம்மன் அனுப்பி வாய்தா கேப்புவானுங்க. சட்டத்தைக் கெடுக்க கொலிஜிய முறை. நாட்டை கெடுக்க திருட்டு த்ரவிஷ ஆட்சி முறை


மணிமுருகன்
அக் 09, 2025 00:27

தள்ளி வைத்து தள்ளி வைத்து ஒப்பேத்திங்க அவ்வளவு காசு கொடுிக்கப்படுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை