2000 டன் கொள்ளளவில் 2 கோடவுன்கள்
சென்னை:கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பயிர் கடன் வழங்குவதுடன் ரேஷன் கடைகளையும் நடத்துகின்றன. அவை லாப நோக்குடன் செயல்பட பல தொழில் செய்யும் சங்கங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வெள்ளாகுளம், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டில் தலா 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கோடவுன்கள் கட்டப்பட உள்ளன. திட்டச்செலவு 3.50 கோடி ரூபாய், 2 கோடவுன்கள்.