உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற, மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணி சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 3 விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

அப்பாவி
நவ 10, 2024 21:31

கச்சத்தீவு இந்தியாவை விட இலங்கைக்கு அருகில் இருக்கிறது. கச்சத்தீவை இலங்கைக்கு குடுத்து பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பை நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். சரித்திர, பூகோள புரிதல் இல்லாமல் கண்டதும் இங்கே வந்து கருத்துப் போடுகிறார்கள்.


அப்பாவி
நவ 10, 2024 21:27

இந்திய கடற்படை, கோஸ்ட் கார்டெல்லாம் தூங்கிட்டிருக்கா? நமது மீனவர்களை எல்லை தாண்டிப் போக அனுமதிப்பதேன்?


Sampath Kumar
நவ 10, 2024 17:28

அவர்கள் எல்லாம் ஹிந்திய மீனவர்கள் இல்லை தமிழ் மீனவர்கள்


Oviya Vijay
நவ 10, 2024 12:59

வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பல மட்டத்து உயர் அதிகாரிகள் அவ்வப்போது இலங்கைக்கு விஜயம் செய்தும் எந்த பலனுமில்லை... தங்களுக்கு தெரிந்த பக்கோடா செய்வது எப்படி என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு வருகின்றனர் என்றே தோன்றுகிறது. வேறு ஒன்றும் பிரயோஜனமாக எதுவும் அவர்கள் செய்வதில்லை... நம் இந்திய நாட்டில் மாநில அரசுகளுக்கு ராணுவத்திற்கு உத்தரவிடும் வகையில் அதிகார வரம்பு இல்லை... அதன் காரணமாக மத்திய அரசை சார்ந்தே இருக்க வேண்டிய அவல நிலை நமக்கு. நமக்கு அவ்வாறான அதிகாரம் இருந்திருந்தால் இந்நேரம் இலங்கை மீனவர்கள் பெரும்பாலானோர் இந்திய ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு தமிழக சிறைகளில் இருந்திருப்பர்... இனியும் பொறுத்திருக்காமல் தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவிலான ஒரு போராட்டத்தை தமிழகத்தில் உள்ள கட்சிகள் முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே மத்திய அரசு கொஞ்சமாவது சொரணை கொண்டு ஏதாவது துணிந்து செய்வதற்கு செவி மடுக்கும்... அதுவரை தமிழகத்தைச் சார்ந்த இந்திய மீனவர்களுக்கான பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு என்பது கேள்விக்குறியே...


raja
நவ 10, 2024 15:11

சர்க்காரியா கண்டுபிடித்த கருணாநிதியின் விங்யான ஊழலுக்கு பயந்து என்ற எதிப்பும் கச்சத்தீவை தூக்கி இந்திரா கொடுத்த போது தமிழ்நாட்டை ஆண்டது கருணாநிதியின் தலைமையில் ஆன திமுக அரசு உடன்பிறப்பே... இதில் சொரணை யாருக்கு இருக்க வேண்டும் கட்ச தேவை மீட்போமுண்ணு தேர்தல் வாக்குறுதி கொடுத்த இப்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு அல்லவா உடன் பிறப்பே...


Sridhar
நவ 10, 2024 12:49

கபட கருணாநிதியின் கயமையால் இந்திரா காந்தி சுலபமாக கச்சத்தீவை விட்டுக்கொடுக்கமுடிந்தது. அதனால் இன்றுவரை நம் மீனவர்களுக்கு துயரம். சரி அதையாவது பழைய விஷயம் என்று விட்டுவிடலாம். குறைந்தபட்சம் இப்போது மீன் பிடிக்க செல்பவர்களுக்கு ஒரு நல்ல GPS கருவிகளை கொடுத்து அவர்கள் எல்லைமீறாமல் பார்த்துக்கொள்ள மாநில அரசு ஏன் முயலவில்லை? இலங்கை தமிழர்களும் தங்கள் கடல் பகுதிகளை விட்டுக்கொடுக்க முன்வராத சூழ்நிலையில், மாநில அரசு ஏன் மீனவர்களுக்கு வேறு கடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க ஆவண செய்யவில்லை? இதில் திருட்டு திமுகவினர் செய்யும் போதை பொருள் கடத்தல் விவகாரம் வேறு மீனவர்கள் பிரச்னையை மேலும் குழப்பும்படி செய்திருக்கிறது. இவ்விவகாரத்தில் கப்பற்படை அத்துமீறல் எங்கே வருகிறது? சட்டப்படி எல்லை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். அப்பாவி மீனவர்கள் தெரியாமல் எல்லை மீறும்போது அவர்களுக்கு உதவவேண்டியது மாநில அரசின் கடமை. அதை செய்யதவறிய திருட்டு கும்பல் அரசை அதன் அட்டூழியத்தை மீனவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரேகுரலில் கண்டிக்கவேண்டும். மேலும் போதை பொருள் கடத்தல்களை கண்காணிக்க மத்திய ரோந்துப்படைகள் இன்னும் மும்முரமாக செயல்படவேண்டும்.


Oviya Vijay
நவ 10, 2024 11:44

இலங்கை அரசு திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போதும் கூட நம் மத்திய அரசு அதற்கு கை கொடுக்கத் தான் முனைகிறது... அவர்களுக்கு பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர பண உதவி, UPI Payment முறையை அந்நாட்டில் நடைமுறைப் படுத்துவதற்கு உதவி, நம் இந்திய நாட்டில் தயாரிக்கப் படும் ரயில் பெட்டிகளை அவர்களுக்கு கொடுத்து உதவி என பல வகைகளில் உதவி செய்ய சித்தமாக இருக்கிறதே தவிர தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரால் தாக்கப் படுவதற்கும், கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் ஒரு நிரந்தர தீர்வு காண முயலவில்லை... இலங்கை அரசுக்கு ஒரு கடிவாளம் போடக் கூட துணிவில்லை. துணிவில்லை என்பதை விட இலங்கையை நம்மால் ஆட்டிப் படைக்க முடியும் என்ற நிலை இருந்தும் கூட அதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதே உண்மை. நமக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்ற இருமாப்பில், நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு... தமிழக மக்களை தொடர்ந்து பல்வேறு வழிகளில் வஞ்சித்துக் கொண்டிருக்கும் பிஜேபி அரசு தாங்கள் செய்யும் செயல்களால் என்றைக்குமே தமிழகத்தில் கால் பதிக்கவே முடியாது என்பதை உணர மறுக்கின்றனர்...


Oviya Vijay
நவ 10, 2024 11:23

இது ஒன்றும் முதல்முறை நடக்கக் கூடியது அல்ல. ஆயிரக்கணக்கான முறை தொடர்ந்து நடந்துகொண்டு தான் உள்ளது... மூன்றாம் முறை தொடர்ந்து மத்தியில் பதவி ஏற்றிருக்கும் பிஜேபியின் கேவலமான அரசியலையே இது காட்டுகிறது. பத்து வருடங்களுக்கு மேலாக மத்தியில் பதவியில் இருக்கும் சங்கீ அரசுக்கு இது தெரியாமல் இல்லை.. கண்டும் காணாதது போல் நடந்து கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை...


raja
நவ 10, 2024 15:03

தமிழன் உரிமையை மீட்பென் கச்ச தீவை மீட்பென் உங்கள் தொகுதியில் ஒருத்தர் வந்தார் ... எங்கேன்னு கேளு உடன் பிறப்பே...


வைகுண்டேஸ்வரன்
நவ 10, 2024 11:22

raja: 23 ஆம் புலிகேசி யாரு? வடிவேலு தானே? அவருக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்? என்னோட தலைவன் யாரு ன்னு எனக்கே தெரியாதே? உங்களுக்கு எப்படி தெரியும்? யார் சார் அது? 300 மீ அகலம் ஒண்ணரை கிலோ மீட்டர் நீளம் இருக்கிற வறண்ட டப்பா தீவை மீட்போம் ன்ன உடனே யாரு, யாருக்கு ஓட்டு போட்டாங்க? அறிவுகெட்ட தனமா எதையாவது எழுதுவதா? கச்சத் தீவு ஒன்றிய அரசின் கீழ வருதுன்னு நீங்களே சொல்றீங்க, அப்புறம் யாரு மீட்போம் னு சொன்னாங்க, யாரு ஓட்டு போட்டாங்க??


raja
நவ 10, 2024 15:05

உந்தலைவனை போல தத்தியாவே இருக்கியே


K.Rajasekaran
நவ 10, 2024 11:12

What Indian navy doing?


தமிழ்வேள்
நவ 10, 2024 10:31

இரண்டு நாட்களுக்கு முன் தென் தமிழக கடலோர பகுதிகளில் மஞ்சள் மருந்து போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தல் செய்ய வைத்து இருந்த போது பிடிபட்டன்.மீனவர் துணையின்றி கடத்தல் நடக்க வாய்ப்பு இல்லை. கடத்தல் காரர்களுக்கு எந்த நாட்டு அரசும் துணைக்கு அல்லது உதவிக்கு வராது


சமீபத்திய செய்தி